உலக அளவில் அதிலும் முக்கியமாக இந்திய மக்களால் அதிக அளவு பயன்படுத்தப்படும் உணவுப் பொருட்களில் ஒன்றுதான் இந்த மைதா. இந்த மாவு இல்லாதா வீடுகளே இல்லை என்ற நிலை தான் தற்போது உள்ளது. மக்கள் பலரும் இதனை அதிக அளவில் உணவில் சேர்த்துக் கொள்கின்றனர். அதிலும் இளைய தலைமுறையினரை பற்றி செல்லவே தேவையில்லை. அதிக அளவில் அவர்கள் உட்கொள்ளும் அனைத்து உணவுகளிலும் மைதா தான் உள்ளது.
முக்கியமான இந்த தலைமுறை குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த நூடுல்ஸ், பீட்சா, பர்கர் உள்ளிட்ட பல துரித உணவுகள் மைதாவில் தான் தயாரிக்கப்படுகிறது. இவை உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் (Disadvantages of Maida Flour) என்று தெரிந்தும் பலர் இதனை தவிர்ப்பது இல்லை. நாளுக்கு நான் இந்த மைதாவின் பயன்பாடு என்பது அதிகரித்துக்கொண்டுதான் வருகிறது.
இந்த நிலையில் தான் மைதா சேர்த்த பொருட்களை அதிக அளவில் எடுத்துக்கொள்ளும் மக்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலின் படி மைதா மாவில் பிளீச்சிங் பவுடர் (Bleaching powder in Maida Flour) கலக்கப்படுகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதன் படி மைதா மாவினால் தயாரிக்கப்பட்ட உணவுகளை உட்கொள்வதன் மூலம் உடலுக்கு ஏராளமான பாதிப்புகள் வரக்கூடும் என்று Darkside Of Maida என்னும் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. மேலும் மைதா மாவு கோதுமையின் சக்கையில் இருந்து தயாரிக்கப்படுகிறது என்பது நாம் அறிந்த ஒன்று தான். இவ்வாறு கோதுமையில் சக்கையில் இருந்து எடுக்கப்படும் இந்த ஸ்டார்ச்சை வெண்மையாக்க ஒரு சில ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகிறது.
இந்த கோதுமை சக்கையில் உள்ள ஸ்டார்ச்சை வெண்மையாக்க பென்சாயில் பெராக்சைடு மற்றும் அலோக்சான் போன்ற வேதிப்பெருட்கள் கலக்கப்படுகிறது. இவற்றில் பென்ஸாயில் ஃபெராக்ஸைடு பிளீச்சிங் பவுடரில் சேர்க்கப்படும் ரசாயனம் ஆகும். இந்த வேதிப்பொருட்கள் மிகவும் வீரியம் மிக்கது என்றும் இதனால் உடலில் பல விதமான பாதிப்புகள் (Maida Flour Disadvantages) ஏற்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த தகவல் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படியுங்கள்: தமிழகத்தில் கோபி மஞ்சூரியன் தடை குறித்து வெளியான முக்கிய தகவல்..! |