Homeஆன்மிகம்விளக்கு ஏற்றும் முறைகள்..! விளக்கு ஏற்றுவதால் வீட்டில் ஏற்படும் நன்மைகள்..! Deepam Etrum Murai..!

விளக்கு ஏற்றும் முறைகள்..! விளக்கு ஏற்றுவதால் வீட்டில் ஏற்படும் நன்மைகள்..! Deepam Etrum Murai..!

கோவிலில் தெய்வத்தின் முன்பும், வீடுகளில் பூஜை அறைகளிலும், எந்த ஒரு நல்ல காரியம் தொடங்குவதற்கு முன்பும் விளக்கு ஏற்றுவது நமது மரபாகும். இந்த தீபம் ஏற்றுவதால் என்ன பலன் கிடைக்கின்றன மற்றும் தீபம் ஏற்ற என்ன எண்ணெய் பயன்படுத்த வேண்டும் எந்த திசையில் Vilakku ஏற்ற வேண்டும் போன்ற விளக்கேற்றும் முறைகள் பற்றிய தகவல்கள் சிலவற்றை இந்த பதிவின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

விளக்கு ஏற்றுவதினால் வீடுகளில் ஒளி பரவுகிறது. விளக்கின் ஒளியில் செல்வத்தை வழங்கும் மகாலட்சுமி, கல்வி அறிவை வழங்கும் சரஸ்வதி, தைரியத்தை வழங்கும் பார்வதி ஆகிய முப்பெறும் தேவிகளும் மறைந்து இருக்கிறார்கள் என இதிகாசங்களில் கூறப்படுகிறது. இவ்வளவு முக்கியதுவம் வாய்ந்த தீபம் ஏற்றி வணங்குவதற்காக தமிழர்கள் கார்த்திகை மாத்தில் தீப தீருநாள் கொண்டாடுகின்றனர். நம் வலைதளத்தில் Vilakku Etrum Murai in Tamil பதிவிட்டுள்ளோம் தற்போது அதனை பற்றி விரிவாக காணலாம்.

வீட்டில் விளக்கு ஏற்றும் முறைகள்

இந்த Vilakku Etrum Murai என்பது நாம் வீட்டில் விளக்கு ஏற்றும் போது எந்த நேரத்தில் ஏற்றுகிறோம், என்ன எண்ணெய் பயன்படுத்துகிறோம், எத்தனை விளக்கு ஏற்றுகிறோம், தினமும் வீட்டில் எத்தனை விளக்கு ஏற்ற வேண்டும், எந்த திசை நோக்கி விளக்கு ஏற்றுகிறோம் போன்றவற்றை குறிக்கிறது. விளக்கு ஏற்றும் முறைகளை பின்பற்றி வீட்டில் விளக்கு ஏற்றுவதால் பல நன்மைகள் நிகழ்கின்றன.

எந்த நேரத்தில் Deepam ஏற்ற வேண்டும்?

தினமும் காலை மற்றும் மாலை இரு வேலையிலும் வீடுகளில் விளக்கு ஏற்ற வேண்டும். பிரம்ம முகூர்த்த நேரம் என கூறப்படும் காலை 4 மணி முதல் 6.30 வரை உள்ள நேரத்தில் தினமும் காலை விளக்கு ஏற்றலாம். அதாவது சூரியன் உதிப்பதற்கு முன்பாக வீடுகளில் விளக்கு ஏற்றவேண்டும்.

அதாபோல் மாலை 6.00 மணி அளவில் தினமும் வீடுகளில் விளக்கு ஏற்றவேண்டும். அதாவது சூரியன் அஸ்தமித்த பிறகு Vilakku etra vendum.

எந்த திசை நோக்கி விளக்கு ஏற்ற வேண்டும்?

நான்கு திசைகளில் மூன்று திசைகளை பார்த்து விளக்கு ஏற்றலாம் ஒரு திசையை பார்த்த மாதிரி விளக்கு ஏற்ற கூடாது. கிழக்கு, மேற்கு மற்றும் வடக்கு திசைகளை பார்த்த மாதிரி விளக்குகள் ஏற்றலாம். தெற்கு திசையை பார்த்து எப்போதும் Vilakku ஏற்றக்கூடாது. போதுவாக வீடுகளில் ஏற்றும் விளக்குகள் கிழக்கு நோக்கியும் ஏற்றுபவர்கள் மேற்று நோக்கியும் நிற்றக வோண்டும் இதுவே Deepam Etrum Murai ஆகும்.

  • கிழக்கு – திசை பார்த்த விளக்கு ஏற்றினால் வீட்டில் துன்பங்கள் நீங்கி சந்தோசம் நிலவும்.
  • மேற்கு – திசை பார்த்த விளக்கு ஏற்றினால் கடன் சுமை மற்றும் தோஷங்கள் நீங்கும்
  • வடக்கு – திசை பார்த்த விளக்கு ஏற்றினால் வீட்டில் செல்வம் பெருகும் மற்றும் அறிவு வளரும் என குறப்படுகிறது.
  • தெற்கு – திசை பார்த்த விளக்கு ஏற்ற கூடாது.

வீட்டில் எத்தனை விளக்கு ஏற்ற வேண்டும்?

வீடுகளில் ஒரு விளக்கு மட்டும் ஏற்ற கூடாது இரண்டு அல்லது அதற்கு மாற்பட்ட விளக்குகள் ஏற்றலாம். காமாசி விளக்கு, அகல் விளக்கு, வெள்ளி விளக்கு என எந்த விளக்கு ஏற்றினாலும் ஒரு விளக்காக ஏற்ற கூடாது. குத்து விளக்கு ஏற்றினால் கூட இரண்டு குத்து விளக்காக தான் ஏற்ற வேண்டும். Kuthu Vilakku ஏற்றும் போது குனிந்த நிலையில் ஏற்றுக்கூடாது. தரையில் அமர்ந்த நிலையில் தான் Kuthu Vilakku ஏற்ற வேண்டும். விளக்கு ஏற்றுவதால் ஏற்படும் நன்மைகள்.

  • அகல் விளக்கு அல்லது மண் விளக்கு – ஏற்றினால் வீட்டில் துன்பங்கள் நீங்கி எல்லாவிதமான நன்மைகளும் நிகழும்.
  • வெள்ளி விளக்கு – ஏற்றினால் வீட்டில் அமைதியான சூழ்நிலை ஏற்ப்படும்.
  • செம்பு விளக்கு – ஏற்றினால் உடல் ஆரோக்கியம் ஏற்றப்படும்.
Vilakku Etrum Murai in Tamil

எந்த எந்த எண்ணெய் ஊற்றி விளக்கு ஏற்றலாம்?

விளக்கு ஏற்ற மிகவும் முக்கிகமானது எண்ணெய். அந்த விளக்கு ஏற்ற பயன்படுத்தும் எண்ணெய்கள் மற்றும் அதனால் ஏற்படும் நன்மைகள் போன்றவை நிறைய உள்ளன. முன்பெல்லாம் நல்லெண்ணை கொண்டு விளக்கு ஏற்றுவார்கள் இது உடல் நலத்திற்கும் நல்லது. தற்போது விளக்கு ஏற்றுவதற்று என்றே எண்ணெய்கள் விற்கப்படுகிறன்றன.

பஞ்ச தீப எண்ணெய் என அழைக்கப்படும் பசு நெய், விளக்கெண்ணை, வேப்ப எண்ணெய், இலுப்பை எண்ணெய், தேங்காய் எண்ணெய் போன்ற ஐந்து எண்ணெய்களையும் ஊற்றி ஐந்து முகம் கொண்ட பஞ்சமி திதியில் விளக்கு ஏற்றினால் அம்மனின் அருள் கிடைக்கும்.

  • பசு நெய் தீபம் ஏற்றினால் – வீட்டில் செல்வ வளம் பெருகும் மற்றும் நாம் நினைக்கும் காரியம் நிறைவேறும் மற்றும் கிரக தோஷம் நீங்கும்.
  • வேப்ப எண்ணெய் தீபம் ஏற்றினால் – செல்வம் பெருகும் மற்றும் தேவியின் அருள் கிடைக்கும்.
  • விளக்கெண்ணை தீபம் ஏற்றினால் – வீட்டில் உள்ளவர்களுக்கு புகழ் கிடைக்கும்.
  • இலுப்பை எண்ணெய் தீபம் ஏற்றினால் – சிவபெருமானுக்கு உகந்த எண்ணெயாக கருதப்படும் இலுப்பை எண்ணெய் விளக்கு ஏற்றினால் சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கும்.
  • தேங்காய் எண்ணெய் தீபம் ஏற்றினால் – தேங்காய் எண்ணெய் விளக்கு ஏற்றினால் மனதில் அமைதியும் உறுதியும், தெளிவும் கிடைக்கும்.
  • வேப்ப எண்ணெய், இலுப்பை எண்ணெய் மற்றும் நெய் தீபம் ஏற்றினால் – மூன்று எண்ணெய் கலந்து தீபம் ஏற்றினால் வீட்டில் செல்வ வளம் பெருகும்.
Kuthu Vilakku

விளக்கு ஏற்ற பயன்படுத்தப்படும் திரிகள்

விளக்கேற்ற பயன்படும் எண்ணெய் போல திரிகளும் முக்கியத்துவம் வாய்ந்தவை ஆகும்.

  • வெள்ளை துணி அல்லது பருத்தி திரி ஆனது எல்லா வகையான நன்மைகளையும் தரும்.
  • கருமை நிற திரி – சனிபகவானுக்கு உகந்த நிறம் எனவே கருமை நிற திரி கொண்டு எள்ளு விளக்கு போட்டால் சனி தோஷம் நீங்கும்.
  • சிவப்பு நிற திரி – செவ்வாய் தோஷத்தை நீக்கும் எனவே திருமண தடை விலக சிவப்பு நிற திரியால் விளக்கு ஏற்றுவார்கள்.
  • தாமரை தண்டு திரி – இந்த திரி போட்டு விளக்கு ஏற்றினால் செல்வம் பெருகும் மற்றும் பூர்வஜென்ம பாவங்களில் இருந்து விடுதலை கிடைக்கும் என நம்பப்படுகிறது.
  • வாழைத்தண்டு திரி – வாழைத்தண்டு கொண்டு செய்யப்படும் திரி மூலம் விளக்கு ஏற்றினால் முன்னோர்கள் செய்த பாவங்கள் நீங்கும்.

விளக்கின் வகைகள்

நாம் ஏற்றும் விளக்குகளில் பல வகைகளை உள்ளன. காமாட்சி விளக்கு, அகல் விளக்கு, வெள்ளி விளக்கு, குத்து விளக்கு, தாமரை விளக்கு, நந்தா விளக்கு போன்ற பல வகையான விளக்குகள் உள்ளன. இவற்றில் அனைவரும் பயன்படுத்துவது அகல் விளக்கு அல்லது மண் விளக்கு, குத்து விளக்கு மற்றும் காமாசி விளக்கு. Kamatchi Vilakku ஆனது கைவிளக்கு எனவும் அழைக்கப்படும். திருமணம் ஆகும் பெண்களுக்கு சீராக இந்த காமாட்சி விளக்கும் வழங்கப்படும். மேல் உள்ள தகவல்கள் மூலம் Deepam Etrum Murai in Tamil பற்றி தெரிந்து கொண்டோம்.

இதையும் படியுங்கள்: கார்த்திகை தீபம் வாழ்த்துக்கள் 2023

விளக்கு ஏற்றும் முறைகள் – FAQ

ஆண்கள் விளக்கு ஏற்றலாமா?

ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் யார் வேண்டுமானாலும் விளக்கு ஏற்றலாம்.

தீபத்திருநாள் 2023 -ல் எப்போது?

நவம்பர் மாதம் 26 ஆம் தேதி 2023 ஆம் ஆண்டு கார்த்திகை தீபத்திருநாள் கொண்டாடப்பட உள்ளது.

தீபம் எவ்வளவு நேரம் எரிய வேண்டும்?

வீட்டில் குறைந்தபட்சம் 30 நிமிடங்களாவது தீபம் எரிய வேண்டும்.

Abinaya G
Abinaya G
வணக்கம்.. நான் அபிநயா. நமது infothalam.com இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக அனைத்து துறை தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் வண்ணம் எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.
RELATED ARTICLES

Most Popular