இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய வீரர் ஹர்திக் பாண்டியா ஆவார். இவர் அடுத்த ஐபிஎல் போட்டிகளிலும் விளையாடி வருகிறார். தொடக்கம் முதலே மும்பை அணிக்காக விளைய இவர் கடந்த 2 சீசன்களாக குஜராத் அணிக்காக கேப்டனாக விளையாடினார். இந்நிலையில் தற்போது இந்த வருடம் மீண்டும் மும்பை அணிக்காக விளையாட உள்ளார். அதுவும் கேப்டனாக விளையாடுவார் என்று அறிவிக்கப்பட்டது.
கடந்த வருடத்தில் குஜராத் அணிக்காக கேப்டனாக விளையாடிய பாண்டியாவை வருகின்ற 2024 ஐபிஎல் தொடரில் தங்களுடைய அணியில் விளையாட வைக்க மும்பை இந்தியன்ஸ் அவரை வாங்கியது.
இதன் காரணமாக வருகின்ற ஐபிஎல் சீசனில் ஹர்திக் பாண்டியா கேப்டனாக மும்பை அணிக்காக விளையாடுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டு இருந்தனர். இந்நிலையில் ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில் சமூக வளைதளங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது.
அந்த தகவல் என்ன என்றால் 2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியா விளையாடமாட்டார் என்பது தான்.
இந்த 2023-ம் ஆண்டில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் பண்டியா ஆரம்பம் முதலே நன்றாக விளையாடினார். இந்நிலையில் அத்தொடரில் பங்களாதேஷுக்கு எதிரான போட்டியில் ஹர்திக் பாண்டியாவுக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக அவரால் சீசன் முழுவதும் விளையாடமுடியவில்லை. இந்த காயத்தால் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டிகளிலும் அவர் விளையாடவில்லை.
அதன் பிறகு நடைபெற்ற டி20 தொடரிலும் அவர் விளையாடவில்லை. எனவே இந்த டி20 தொடர்களை தொடர்ந்து ஹர்திக் ஐபிஎல் போட்டிகளில் விளையாடமாட்டார் என்ற தகவல் பரவியது.
எனினும் இந்த தகவல் பற்றி இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதும் இன்னும் வெளியாகவில்லை. ஆனால் இது உண்மை என்றால் பாண்டியா 2024-ம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு குறைவு. எனவே மும்பை இந்தியன்ஸ் அணியை கேப்டனாக மீண்டும் ரோஹித் ஷர்மா வழிநடத்துவார் என்ற பல செய்திகள் வெளியாகி வருகிறது.
இதையும் படியுங்கள்: IPL Mini Auction: 10 அணிகளில் உள்ள மொத்த வீரர்கள்..! யார் எந்த அணியில்..! |