Homeசமையல் குறிப்புகள்காளான் பிரியாணி இப்படி ஒருமுறை செஞ்சு பாருங்க..! திரும்ப திரும்ப செய்வீங்க..!

காளான் பிரியாணி இப்படி ஒருமுறை செஞ்சு பாருங்க..! திரும்ப திரும்ப செய்வீங்க..!

நாம் அனைவரும் பல விதமான பிரியாணி வகைகளை ருசித்து இருப்போம். அசைவ பிரியர்கள் என்றால் சிக்கன், மட்டன், மீன் என்று பல விதமான பிரியாணிகளை சாப்பிட்டு இருப்போம். ஆனால் சைவம் உண்பவர்கள் அசைவ பிரியாணி சுவையில் ஒரு பிரியாணி சாப்பிட வேண்டும் என்று நினைத்தால் நிச்சயம் இந்த காளான் பிரியாணியை அவர்கள் செய்து பார்க்கலாம். இதுபோல சைவ பிரியர்களுக்கு அசைவத்தின் சுவையை தரும் ஒரு பொருள் தான் காளான். இந்த காளானை வைத்து சுவையான பிரியாணி செய்வது எப்படி (Kalaan Biryani Seivathu Eppadi) என்பது குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.

காளான் பிரியாணி செய்வது எப்படி (How to Make Mushroom Biryani in Tamil)

தேவையான பொருட்கள் (Mushroom Biryani Recipe Ingredients)

  • பாசுமதி அரிசி – 2 கப்
  • காளான் – 400 கிராம்
  • பெரிய வெங்காயம் – 4
  • தேங்காய் பால் – 2 கப்
  • தண்ணீர் – 3 கப்

ஊறவைக்க தேவைப்படும் பொருட்கள்

  • தயிர் – 1 கப்
  • தக்காளி – 5
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன்
  • மிளகாய் தூள் – 2டீஸ்பூன்
  • மல்லித் தூள் – 2 டீஸ்பூன்
  • கரம் மசாலா – 2 டீஸ்பூன்
  • உப்பு – சுவைக்கேற்ப
  • புதினா – ஒரு கை பிடி
  • கொத்தமல்லி – ஒரு கை பிடி

பிரியாணி தாளிப்பதற்கு

  • நெய் – தேவையான அளவு
  • எண்ணெய் – தேவையான அளவு
  • பட்டை – 2
  • கிராம்பு – 4
  • பிரியாணி இலை – 2
  • ஏலக்காய் – 3
  • அன்னாசிப்பூ – 1
  • சீரகம் – 1 டீஸ்பூன்
  • சோம்பு – 1 டீஸ்பூன்

காளான் பிரியாணி செய்முறை (Mushroom Biryani Recipe in Tamil)

  • காளான் பிரியாணி செய்வதற்கு முதலில் ஒரு பாசுமதி அரிசியை நன்கு கழுவி அதில் 3 கப் நீரை ஊற்றி 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
  • இப்போது ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி அது சூடானதும், அதில் நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • மற்றொரு பாத்திரத்தில் சுத்தம் செய்து வைத்துள்ள காளான், தயிர், நறுக்கிய தக்காளி, தனியே வதக்கி வைத்துள்ள வெங்காயம், புதினா, கொத்தமல்லி, இஞ்சி பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், கரம் மசாலா மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி அதனை ஊறவைக்கவும்.
  • இப்போது ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி அது சூடான பிறகு பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசிப்பூ, சீரகம், சோம்பு ஆகியவை சேர்த்து தாளிக்கவும்.
  • பின்னர் அதில் நாம் முன்பே ஊறவைத்துள்ள காளானை சேர்க்கவும். பிறகு அதோடு 2 டீஸ்பூன் நெய் ஊற்றி சில நிமிடங்கள் நன்கு வதக்க வேண்டும்.
  • காளான் நன்றாக நீர் விட்டு வெந்த உடன் அதில் நாம் அரை மணி நேரம் ஊற வைத்துள்ள பாசுமதி அரிசியை ஊறவைத்த 3 கப் நீருடன் சேர்த்து கிளற வேண்டும்.
  • இப்போது அந்த கலவையில் 1/2 கப் கெட்டியான தேங்காய் பால் ஊற்றி கிளறவும். இப்போது இதனை நன்றாக கொதிக்க விட வேண்டும். நாம் ஊற்றிய நீர் முக்கால் பாகம் வற்றிய பின்னர் குக்கரை மூடி அடுப்பை குறைவான தீயில் வைத்து ஒரே ஒரு விசில் விடவும்.
  • ஒரு விசில் வந்தவுடன் அடுப்பை அனைத்து குக்கரில் விசில் தானாக அடங்கும் வரை விடவும். இப்போது குக்கரை திறந்து பார்த்தால் சுவையான காளான் பிரியாணி தயார்.
Kalaan Biryani Seivathu Eppadi

நாம் இப்பதிவில் அனைவரும் விரும்பி உண்ணும் சுவையில் காளான் பிரியாணி செய்வது எப்படி (Mushroom Biryani Seivathu Eppadi) என்பது குறித்து பார்த்துள்ளோம்.

காளான் பிரியாணி இப்படி ஒருமுறை செஞ்சு பாருங்க..! திரும்ப திரும்ப செய்வீங்க..!

காளானை வைத்து சுவையான பிரியாணி செய்வது எப்படி என்பது குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.

Type: Appetizer

Cuisine: India

Keywords: Mushroom Biryani Recipe, Mushroom Biryani, Kalaan Biryani Seivathu Eppadi

Recipe Yield: 5

Preparation Time: PT50M

Cooking Time: PT30M

Total Time: PT1H20M

Recipe Ingredients:

  • Basmati rice – 2 cups
  • Mushroom – 400 grams
  • Coconut milk – 2 cups
  • Water – 3 cups
  • Curd – 1 cup
  • Tomato – 5
  • Ginger garlic paste – 2 tbsp
  • Chilli powder – 2 tsp
  • Coriander powder – 2 tbsp
  • Garam masala – 2 tbsp
  • Salt – as per taste
  • Mint – A handful
  • Coriander – a handful
  • Ghee – required quantity
  • Oil – required amount
  • Band – 2
  • Cloves – 4
  • Biryani leaves – 2
  • Cardamom – 3
  • Pineapple – 1
  • Cumin – 1 tbsp
  • Anise – 1 tbsp

Recipe Instructions: காளான் பிரியாணி செய்வதற்கு முதலில் ஒரு பாசுமதி அரிசியை நன்கு கழுவி அதில் 3 கப் நீரை ஊற்றி 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும். இப்போது ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி அது சூடானதும், அதில் நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். மற்றொரு பாத்திரத்தில் சுத்தம் செய்து வைத்துள்ள காளான், தயிர், நறுக்கிய தக்காளி, தனியே வதக்கி வைத்துள்ள வெங்காயம், புதினா, கொத்தமல்லி, இஞ்சி பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், கரம் மசாலா மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி அதனை ஊறவைக்கவும். இப்போது ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி அது சூடான பிறகு பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசிப்பூ, சீரகம், சோம்பு ஆகியவை சேர்த்து தாளிக்கவும். பின்னர் அதில் நாம் முன்பே ஊறவைத்துள்ள காளானை சேர்க்கவும். பிறகு அதோடு 2 டீஸ்பூன் நெய் ஊற்றி சில நிமிடங்கள் நன்கு வதக்க வேண்டும். காளான் நன்றாக நீர் விட்டு வெந்த உடன் அதில் நாம் அரை மணி நேரம் ஊற வைத்துள்ள பாசுமதி அரிசியை ஊறவைத்த 3 கப் நீருடன் சேர்த்து கிளற வேண்டும். இப்போது அந்த கலவையில் 1/2 கப் கெட்டியான தேங்காய் பால் ஊற்றி கிளறவும். இப்போது இதனை நன்றாக கொதிக்க விட வேண்டும். நாம் ஊற்றிய நீர் முக்கால் பாகம் வற்றிய பின்னர் குக்கரை மூடி அடுப்பை குறைவான தீயில் வைத்து ஒரே ஒரு விசில் விடவும். ஒரு விசில் வந்தவுடன் அடுப்பை அனைத்து குக்கரில் விசில் தானாக அடங்கும் வரை விடவும். இப்போது குக்கரை திறந்து பார்த்தால் சுவையான காளான் பிரியாணி தயார்.

Editor's Rating:
4.5
இதையும் படியுங்கள்: இந்த வீக் எண்ட்ல… சிக்கன் மட்டன்கு பதிலா ஒரு முறை இப்படி Fish Biryani செஞ்சு பாருங்க..!
Jayasri C
Jayasri Chttps://infothalam.com/
நான் ஜெயஸ்ரீ, நான் Infothalam.com இணைய தளத்தில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறேன். தமிழ் மீதும் கட்டுரைகள் எழுவதில் உள்ள ஆர்வத்தால் நம்முடைய Infothalam இணையத்தளத்தில் சமையல் குறிப்பு, நாட்டு நடப்புச் செய்திகள், விளையாட்டு செய்திகள் போன்ற இன்னும் பல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
RELATED ARTICLES

Most Popular