Homeசெய்திகள்தெரியாத திருமண வீட்டில் சாப்பிட்டால் அபராதம் அல்லது சிறை..! அதிர்ச்சியில் மக்கள் ..!

தெரியாத திருமண வீட்டில் சாப்பிட்டால் அபராதம் அல்லது சிறை..! அதிர்ச்சியில் மக்கள் ..!

திருமண வீட்டில் சாப்பாடு என்றால் யாருக்கு தான் பிடிக்காது. அனைவரும் விரும்பி சாப்பிடுவர். அதிலும் சிலர் இதுபோன்ற சுவை வேண்டும் என்பதற்காக அதிகமான குறிப்புகளை எல்லாம் தெரிந்து வைத்துக் கொண்டு அதே போல் சமைக்க வேண்டும் என்பதற்காக பல விதமான ரெசிபிகளையும் செய்வர்.

எனினும் நம்மால் கல்யாண வீடுகளில் இருக்கும் சுவையை நம்மால் கொண்டுவர முடியாது. பலர் தினந்தோறும் கல்யாணம் இருந்தால் சாப்பிடலாம் என்றும் என்னுவர். அனால் அது சாத்தியம் இல்லை என்பது நாம் அறிந்த ஒன்றே. ஆனால் அதிக பட்சம் சில மாதங்களை தவிர்த்து அனைத்து மாதங்களிலும் திருமணம் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டு தான் வருகிறது.

ஆனால் நாம் அனைவரது வீட்டு திருமணத்திற்கும் அழையா விருந்தாளியாக சென்றுவிட முடியாது அல்லவா. நமக்கு தெரிந்தவர்கள் மற்றும் நமது உறவினர்கள் வீட்டு திருமணங்களில் மட்டுமே நம்மால் கலந்துக்கொள்ள முடியும். ஆனாலும் சில நேரங்களில் பலர் கடும் பசி காரணமாக யார் என்று தெரியாத வீட்டு திருமணங்களுக்கு சென்று சத்தம் இல்லாமல் சாப்பிட்டு வருவர்.

இந்நிலையில் தற்போது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இதன் படி தெரியாத திருமண வீட்டில் சாப்பிட்டால் அபராதம் அல்லது சிறைக்கு செல்ல வேண்டும் என்று கூறப்படுகிறது. இதுபோல தெரியாதவர்கள் இல்ல திருமணங்களில் சென்று சாப்பிடுவதை அந்த திருமண வீட்டார் யாரும் பார்த்தால் அவர்களை கண்டித்து அனுப்புவர். இன்னும் சிலர் அவர்களை அடித்து துன்புறுத்துவர்.

Kalyana Pandhi

இந்நிலையில் தான் தற்போது இந்த தகவல் வெளியாகியுள்ளது இதன் மூலம் தெரியாத திருமண வீடுகளில் சென்று சாப்பிட்டு அந்த திருமணத்தை நடத்துபவர் புகார் அளித்தால் அந்த நபர் மீது ஐபிசி பிரிவு 441-ன் கிரிமினர் அத்துமீறல் சட்டத்தின் கீழ் 3 மாதம் சிறை தண்டனை அல்லது 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று தகவல் (Penalty for Eating in An Unknown Marriage) தெரிவிக்கப்பட்டுள்ளது. சில நேரங்களில் இரண்டும் விதிக்கப்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்கள்: கர்ப்பிணி பெண்களுக்கு ஓர் நற்செய்தி..! அறிவிப்பை வெளியிட்டது தமிழக அரசு..!
Sangeetha
Sangeetha
வணக்கம் எனது பெயர் சங்கீதா. நான் infothalam.com இல் Content creator ஆக பணியாற்றி வருகிறேன். நான் தமிழ் கட்டுரை எழுதுவதில் ஆர்வம் உடையவராக இருப்பதால், அனைத்து துறைகள் சார்ந்த விடயங்களை எழுதி வருகிறேன்.
RELATED ARTICLES

Most Popular