Homeசெய்திகள்Yellow Alert: தமிழ்நாட்டிற்கு மஞ்சள் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

Yellow Alert: தமிழ்நாட்டிற்கு மஞ்சள் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

தினமும் அதிகரித்து வரும் வெப்பத்தின் காரணமாக தமிழகத்தில் அதிக அளவு வெப்ப அலை வீசி வருகிறது. இதனால் தமிழ்நாட்டிற்கு மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம்.

தமிழ்நாடு மட்டுமல்லாமல் கர்நாடகா, ஒடிசா, உத்திரப்பிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்களுக்கும் மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது (Yellow Alert in Tamil Nadu 2024) வானிலை ஆய்வு மையம். தென்மாவடங்களை வெயில் வாட்டி வதைத்து மட்டுமல்லாமல், வட மாவட்டங்களிலும் கடுமையான வெப்பம் நிலைவி வருகிறது.

இந்நிலையில் மேற்குவங்க மாநிலத்தில் அதிக அளவு வெப்ப அலை வீசும் என்பதால் அந்த மாவட்டத்திற்கு மட்டும் சிவப்பு நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்று (ஏப்ரல் 23) அதிக அளவு வெப்ப அலை வீசும் என்பதால், இன்று மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம். அதிகபட்சமாக ஒடிசாவில் தான் வெப்பநிலை பதிவாகி உள்ளது. ஒடிசாவில் 111டிகிரி வெப்பம் பதிவாகி இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அதிகபட்சமாக 109 டிகிரி பார்ன்ஹூட் வெப்பம் பதிவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலையே நிலவக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் (Veppa Alai in Tamil nadu 2024) தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, தென் இந்தியப்பகுதிகளின் மேல்வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை (Veppa Alai) ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Yellow Alert in Tamil Nadu 2024
மேலும் படிக்க: தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு..! சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்..!
Sangeetha
Sangeetha
வணக்கம் எனது பெயர் சங்கீதா. நான் infothalam.com இல் Content creator ஆக பணியாற்றி வருகிறேன். நான் தமிழ் கட்டுரை எழுதுவதில் ஆர்வம் உடையவராக இருப்பதால், அனைத்து துறைகள் சார்ந்த விடயங்களை எழுதி வருகிறேன்.
RELATED ARTICLES

Most Popular