இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய ஆல் ரவுண்டர்களில் ஒருவர் தான் ஹர்திக் பாண்டியா. இவர் தனது சிறந்த விளையாட்டின் மூலம் இந்திய அணிக்கு பல போட்டிகளில் வெற்றியை தந்துள்ளார். இந்நிலையில் தான் இவர் சில வருடங்களாகவே ஐபிஎல் (Indian Premier League) தொடரில் இவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடினார். ஐபிஎல்லின் (IPL) உள்ள மிகச்சிறந்த அணிகளில் ஒன்று தான் இந்த மும்பை அணி.
ஆனால் கடந்த இரண்டு சீசன்களாக புதிதாக களம் இறங்கிய குஜராத் அணிக்காக அந்த அணியின் கேப்டனாக விளையாடி வந்தார். இவர் தலைமையிலான குஜராத் அணி களம் இறங்கிய முதல் சீசனிலேயே சாம்பியன் பட்டத்தை வென்றது. இரண்டாவது சீசனிலும் இறுதிப்போட்டி வரை சென்று தனது சிறந்த ஆட்டம் மூலம் போட்டியை இறுதிப்போட்டி வரை கொண்டு சென்று கோப்பையை சென்னை அணியிடம் விட்டுக்கொடுத்தது.
இந்த சீசன் இந்த குஜராத் அணிக்கு 3-வது சீசன் ஆகும். ஆனால் இந்த சீசனில் பாண்டியா அணியில் இல்லை. இந்த சீசனில் மீண்டும் பாண்டியா மும்பை அணிக்காக விளையாடவுள்ளார். மேலும் இந்த சீசனில் பாண்டியா மும்பை அணியின் கேப்டனாக (Mumbai Indians Captain Pandya) விளையாடவுள்ளார். இது பல மும்பை ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்தாலும் பலரை கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை அணிக்கு இத்தனை வருடங்களாக கேப்டனாக இருந்தது ரோகித் சர்மா தான். தற்போது பாண்டியாவை கேப்டனாக அறிவித்துள்ளது ரசிகர்கள் பலரிடம் கோபத்தை எற்படுத்தியுள்ளது. மேலும் சில நாட்களுக்கு முன்பு நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின் போது கூட பாண்டியா மற்றும் மும்பை அணியின் பயிற்ச்சியாளர் ஆகியோர் ரோகித் சர்மாவை பற்றி பேசாமல் அதை தவிர்த்து விட்டனர். இதனால் ரோகித்தின் ரசிகர்கள் பெரும் கோபம் அடைந்துள்ளார். இதன் காரணமாக அவர்கள் சமூக வலைதளங்களில் #RIP Hardik Pandya என்னும் ஹேஸ்டேக்கை டிரெண்ட் (Hardik Pandya Trending Hashtag) செய்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்: CSK ரசிகர்களுக்கு அதிர்ச்சி..! முக்கிய வீரருக்கு ஏற்பட்ட காயம்..! இந்த சீசனில் விளையாடுவாரா? |