கஷ்டங்கள் நம் எல்லோரிடத்திலும் இருக்கும். கவலை இல்லாத மனிதர்கள் யாராவது உலகில் இருப்பார்களா என்று பார்த்தால் அது பிறந்த குழந்தை மட்டும் தான். ஏனென்றால் குழந்தைக்கு தான் தான் வாழ்க்கை என்றால் என்ன என்பது எல்லாம் தெரியாது. பணம் இருந்தால் நம் கவலை எல்லாம் பறந்து போயிவிடும் என்று ஏழை கூறுவான். அவனுக்கு பணம் தான் கவலையாக இருக்கும். ஆனால் பணக்காரனை கேட்டால் அந்த பணத்தால் எனக்கு கவலையே என்று கூறுவான்.
இப்படி பணக்காரணாக இருந்தாலும் (How to Clear Family Problems) சரி, ஏழையாக இருந்தாலும் சரி மனிதனாக பிறந்த அனைவருக்கும் கஷ்டங்கள் இருக்கும். கஷ்டம் இல்லாத மனிதர்கள் யாரும் இல்லை. ஒவ்வொரு குடும்பத்திலும் ஒவ்வொரு கஷ்டம் கணவன்-மனைவி பிரச்சனை, குழந்தைகளுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால், அதனால் பெற்றோர்களுக்கு கவலை, கடன் பிரச்சனை, உறவினர்களால் கஷ்டம், அக்கம் பக்கத்தினர்களால் பிரச்சனை போனற் பிரச்சனைகள் நம் வீட்டில் வாடிக்கையாக உள்ளது தான்.
இதனால் நமக்கு மனஅழுத்தம், சந்தோஷம் இல்லாமல் இருப்பது போன்ற பிரச்சனைகள் உருவாகும். இதனை எப்படி சமாளிப்பது என்றே நமக்கு தெரியாது. இதற்கு ஒரு வழி இருக்கிறது. இதனை நம்புவதற்கு சற்று கடினமாக இருந்தாலும் உண்மையில் இது நல்ல பலனை அளிக்க வல்லது. இதனை இரவில் மட்டும் தான் செய்ய வேண்டும். ஒரு துண்டு வெல்லத்தை வீட்டின் நிலை வாசலில் ஓரமாக வைக்க வேண்டும்.
மறுநாள் காலையில் திரும்ப அதனை பார்க்கும் போது அந்த வெல்லம் அங்கு இருந்தால், அது கஷ்டம் வருவதற்கான (kudupathil ulla prachanaigalai eppadi samalippathu) அறிகுறியாகும். ஆனால் அந்த வெல்லத்தை எறும்புகள் சாப்பிட்டு, அந்த இடத்தில் வெள்ளம் இல்லாமல் இருந்தால் உங்கள் வாழ்க்கையில் கஷ்டங்கள் நீங்கி (kudupathil ulla prachanaigalai sari seivathu eppadi) மகிச்சியும், செல்வமும் பெருகும் என்பதற்கான அறிகுறியாகும்.
மேலும் படிக்க: வீட்ல மாவு இல்லையா? அப்போ 5 நிமிடத்தில் மாவே அரைக்காமல் Instant Dosa..! ஈஸியா செய்யலாம் வாங்க..! |