Homeவிளையாட்டுஇஷான் கிஷனுக்கு பிசிசிஐ எச்சரிக்கை..! ஏன் தெரியுமா?

இஷான் கிஷனுக்கு பிசிசிஐ எச்சரிக்கை..! ஏன் தெரியுமா?

வருடம் முழுவதும் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று தான் வருகிறது. இப்போட்டிகளில் இந்திய அணியின் வீரர்கள் அனைவரும் தங்களுடைய சிறந்த முயற்சி மற்றும் உழைப்பின் காரணமாக அணியின் வெற்றிக்கு தங்களால் முடிந்த அனைத்தையும் செய்து தான் வருகின்றனர்.

இந்நிலையில் தான் தற்போது நடைபெற்று வரும் போட்டிகளில் இந்திய அணியில் சில வீரர்கள் தொடர்ந்து இடம் பெறவில்லை. இதன் காரணமாக வீரர்கள் குறித்த பல வதந்திகள் பரவி வருகிறது. மேலும் அணியில் விளையாடாத விரர்களில் இஷான் கிஷனும் ஒருவர். மேலும் இதற்கு முன்னர் கூட தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் இருந்து பாதியிலேயே விலகினார்.

இதுகுறித்து சில நாட்களுக்கு முன்பு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான ராகுல் டிராவிட் அவர்களிடம் இஷான் கிஷன் இந்திய அணியில் இடம் பிடிக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பபட்டது. இந்த கேள்வியால் அதிருப்தி அடைந்த அவர் இஷான் கிஷன் மீண்டும் இந்திய அணிக்கு திரும்ப விளையாட விரும்பினா் என்றால் அவர் முதலில் உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்று அவர் பதில் அளித்தார்.

மேலும் இஷான் கிஷன் (Ishan Kishan) தனது சொந்த அணியான ஜார்கண்டிற்காக ரஞ்சி டிராபி போட்டிகளில் விளையாடவில்லை. அதற்கு பதிலாக பரோடாவில் ஹர்திக் மற்றும் க்ருணால் பாண்டியாவுடன் ஐபிஎல் போட்டிக்களுக்கான பயிற்சியை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் இஷான் கிஷனின் இந்த செயல் பிசிசிஐக்கு பிடிக்கவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

வீரர்கள் மற்ற போட்டிகளை விடவும் ஐபிஎல் (IPL) போட்டிக்கு அதிக முன்னுரிமை கொடுப்பதால் பிசிசிஐ கோபமடைந்துள்ளது. எனவே ரஞ்சி டிராபியில் பங்கேற்காத அனைத்து வீரர்களுக்கும் பிசிசிஐ நோட்டீஸ் அனுப்ப தயாராகி வருகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது.

இதுமட்டுமின்றி வீரர்களுக்கு காயம் இல்லை என்றால் அவர்கள் அனைவரும் உள்நாட்டு கிரிக்கெட்டில் கட்டாயம் விளையாட வேண்டும் என்பதில் BCCI தெளிவாக உள்ளது. எனவே உள்நாட்டுப் போட்டிகளில் விளையாடாத வீரர்களுக்கு பிசிசிஐ நோட்டீஸ் (BCCI warns Ishan Kishan) அனுப்பலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Criketer Ishan Kishan
இதையும் படியுங்கள்: Pro Kabaddi 2024: டாப் 10 ரைடர்ஸ் யார் தெரியுமா?
Sangeetha
Sangeetha
வணக்கம் எனது பெயர் சங்கீதா. நான் infothalam.com இல் Content creator ஆக பணியாற்றி வருகிறேன். நான் தமிழ் கட்டுரை எழுதுவதில் ஆர்வம் உடையவராக இருப்பதால், அனைத்து துறைகள் சார்ந்த விடயங்களை எழுதி வருகிறேன்.
RELATED ARTICLES

Most Popular