Homeவிளையாட்டுCSK vs SRH: இன்றைய போட்டியில் இருந்து விலகிய CSK-வின் முக்கிய வீரர்..! காரணம் என்ன?

CSK vs SRH: இன்றைய போட்டியில் இருந்து விலகிய CSK-வின் முக்கிய வீரர்..! காரணம் என்ன?

கடந்த மார்ச் 22-ம் தேதி முதல் இந்த ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் தொடங்கியது. முதல் போட்டி கடந்த ஆண்டு சேம்பியன்களான சென்னை அணிக்கும் பெங்களூரு அணிக்கும் நடைபெற்றது. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய சென்னை அணி இந்த சீசனில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. அதன் பிறகு இரண்டு போட்டிகளில் விளையாடிய சென்னை அணி ஒருப் போட்டியில் வெற்றியும் மற்றொரு போட்டியில் தோல்வியும் அடைந்தது.

இதுவரை மூன்று போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி இரண்டு போட்டிகளில் வெற்றியையும் 1 போட்டியில் தோல்வியையும் அடைந்துள்ளது. இந்நிலையில் தான் இன்று நான்காவது போட்டியில் SRH அணியை (CSK vs SRH Match) சந்திக்க உள்ளது. இந்த போட்டி மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக உள்ளது. இந்நிலையில் தான் தற்போது சென்னை அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர் இன்று நடைபெற உள்ள போட்டியில் இருந்து விலகுவதாக தகவல் (Mustafizur Rahman Left In Today Match) வெளியாகியுள்ளது.

இந்த தகவல் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது. இந்த தகவலின் சென்னை அணியின் நட்சத்திர பந்து வீச்சாளரான முஸ்தபிசுர் ரஹ்மான் இன்று நடைபெறவுள்ள போட்டியில் இருந்து விலகியுள்ளார். கடந்த மூன்று போட்டிகளிலும் தனது சிறந்த விளையாட்டின் மூலம் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இவர் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக இன்று நடைபெற உள்ள போட்டிக்கான சென்னை அணியின் பிளேயிங் லெவனில் (Today CSK Playing 11) அவர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Mustafizur Rahman

தற்போது இவர் அமெரிக்காவுக்கு செல்ல வேண்டிய விசா தொடர்பாக வங்கதேசம் செல்ல இருப்பதால் இன்று நடைபெற உள்ள ஹதராபாத் அணியுடனான போட்டியில் இருந்து விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இவருக்கு பதிலாக இன்றைய (Indraiya Chennai Potti) போட்டியில் சென்னை அணியின் சுழற்பந்து வீச்சாளரான் மகீஷ் தீக்ஷனா அணியில் இடம் பெறுவற்கான வாய்ப்புகள் அதிக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படியுங்கள்: CSK vs KKR Match Ticket: சேப்பாக்கத்தில் நடைபெறும் போட்டி..! டிக்கெட் விற்பனை தொடங்கும் நாள் அறிவிப்பு..!
Jayasri C
Jayasri Chttps://infothalam.com/
நான் ஜெயஸ்ரீ, நான் Infothalam.com இணைய தளத்தில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறேன். தமிழ் மீதும் கட்டுரைகள் எழுவதில் உள்ள ஆர்வத்தால் நம்முடைய Infothalam இணையத்தளத்தில் சமையல் குறிப்பு, நாட்டு நடப்புச் செய்திகள், விளையாட்டு செய்திகள் போன்ற இன்னும் பல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
RELATED ARTICLES

Most Popular