Homeசமையல் குறிப்புகள்Kuthiraivali Pongal Recipe: இத ஒரு டைம் செஞ்சு பாருங்க..! அப்புறம் இட்லி தோசை எல்லாம்...

Kuthiraivali Pongal Recipe: இத ஒரு டைம் செஞ்சு பாருங்க..! அப்புறம் இட்லி தோசை எல்லாம் மறந்துடுவீங்க..!

நாம் அனைவரும் காலை வேலைகளில் இட்லி, தோசை போன்ற உணவுகளை தான் அதிகம் எடுத்துக்கொள்கிறோம். ஆனால் வித்தியாசமாக சாப்பிட வேண்டும் என்றும் அந்த உணவு ஆரோக்கியமானதகாவும் இருக்க வேண்டும் என்பதுதான் நம்மில் பலருடைய எண்ணமாக உள்ளது. ஆனால் அது போன்ற உணவுகள் செய்தால் நேரம் அதிகம் ஆகும் சில நேரங்களில் அதன் சுவை குடும்பத்தில் உள்ளவர்களுக்கு பிடிக்காது என இதுபோன்ற பல காரணங்களால் நாம் பல உணவுகளை சமைக்காமலே இருந்து இருப்போம்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பி உண்ணப்படும் உணவு தான் பொங்கல். இதனை நாம் நம் வீடுகளில் பச்சரிசியில் செய்து இருப்போம். இது அம்மாக்களுக்கும் மிகவும் பிடித்த ஒரு உணவு என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் இந்த பொங்கல் சமைப்பதற்கும் மிக எளிதாக இருக்கும். நாம் இதுவரை சர்க்கரை பொங்கல், வெண்பொங்கல், பாசிப்பருப்பு பொங்கல் என்று பலவகையான பொங்கல் வகைகளை சாப்பிட்டு இருப்போம். அந்த வரிசையில் தான் தற்போது ஒரு ஆரோக்கியமான குதிரைவாலி பொங்கல் எளிமையாக செய்வது எப்படி என்பது பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.

குதிரைவாலி பொங்கல் செய்முறை (Kuthiraivali Pongal Recipe in Tamil)

தேவையான பொருட்கள்

  • குதிரைவாலி அரிசி – 2 கப்
  • பாசிப்பருப்பு – 1/2 கப்
  • நெய் – 10 டேபிள் ஸ்பூன்
  • சீரகம் – 1 டேபிள் ஸ்பூன்
  • மிளகு – அரை டேபிள் ஸ்பூன்
  • முந்திரி பருப்பு – 20
  • இஞ்சி – சிறிய துண்டுகள்
  • கருவேப்பிலை – சிறிதளவு
  • உப்பு – தேவையான அளவு

குதிரைவாலி பொங்கல் செய்முறை

  • முதலில் அடுப்பில் ஒரு கடாய் வைத்துக் கொள்ளவும். அந்த கடாய் சூடான பிறகு அதில் நெய்யை சேர்க்க வேண்டும். இப்போது அதில் சீரகம், மிளகு, முந்திரி, நறுக்கிய இஞ்சி துண்டுகள் மற்றும் சிறிதளவு கருவேப்பிலையை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும்.
  • இப்போது நாம் எந்த கப்பில் குதிரைவாலி அரிசியை எடுத்துள்ளோம் அதே கப்பில் கப் அரிசிக்கு மூன்று கப் தண்ணீர் என்ற அளவில் எடுத்துக்கொண்டு எடுத்து கொண்டு அதனை கடாயில் ஊற்ற வேண்டும்.
  • பின்னர் இதனை நன்கு கொதிக்க விட வேண்டும். இப்போது இந்த கலவையில் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த தண்ணீர் நன்றாக கொதித்த பிறகு குதிரைவாலி அரிசி மற்றும் பாசிப்பருப்பு இரண்டையும் கழுவி கொதிக்கும் தண்ணீரில் சேர்க்கவேண்டும்.
  • ஒரு கப் அரிசிக்கு மூன்று பங்கு தண்ணீர் ஊற்றினால் தான் பொங்கல் குளைவாக இருக்கும். அப்போது தான் சுவையும் அதிகமாக இருக்கும். குழைவாக உண்பதற்கு பிடிக்காதவர்கள் மூன்று கப் தண்ணீருக்கு பதிலாக இரண்டு கப் தண்ணீர் ஊற்றினால் போதுமானது.
  • இப்போது இதை 15 அல்லது 20 நிமிடங்கள் வரை நன்றாக வேக வைக்கவும். இப்போது இந்த குதிரைவாலி அரிசி வெந்த பின் நன்கு கிளறி விட வேண்டும்.
  • அடி பிடிக்காத அளவுக்கு கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். இப்போது அடுப்பில் இருந்து இறக்கி சூடாக பரிமாறவும். இப்போது ருசியான குதிரைவாலி பொங்கல் தயார். இந்த குதிரைவாலி பொங்கல் சாப்பிடும் போது சட்னி அல்லது சாம்பார் வைத்து சாப்பிடவது இதன் சுவையை இன்னும் அதிகப்படுத்தும்.
Kuthiraivali Pongal Seivathu Eppadi

நாம் இப்பதிவில் உடலுக்கு ஆரோக்கியமான குதிரைவாலி பொங்கல் செய்வது எப்படி (Kuthiraivali Pongal Seivathu Eppadi) என்பது பற்றி பார்த்துள்ளோம்.

Kuthiraivali Pongal Recipe: இத ஒரு டைம் செஞ்சு பாருங்க..! அப்புறம் இட்லி தோசை எல்லாம் மறந்துடுவீங்க..!

ஆரோக்கியமான குதிரைவாலி பொங்கல் எளிமையாக செய்வது எப்படி என்பது பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.

Type: Appetizer

Cuisine: Tamil Nadu

Keywords: Kuthiraivali Pongal Recipe, Kuthiraivali Pongal

Recipe Yield: 4

Preparation Time: PT10M

Cooking Time: PT30M

Total Time: PT40M

Recipe Ingredients:

  • Barnyard Millet– 2 cups
  • Lentils – 1/2 cup
  • Ghee – 10 Tablespoon
  • Cumin – 1 Tablespoon
  • Pepper – half a tablespoon
  • Cashews – 20
  • Ginger – small pieces
  • Curry Leaves – a little
  • Salt – required quantity

Recipe Instructions: முதலில் அடுப்பில் ஒரு சிறிய கடாய் வைத்துக் கொள்ளவும். அந்த கடாய் சூடான பிறகு அதில் நெய்யை சேர்க்க வேண்டும். இப்போது அதில் சீரகம், மிளகு, முந்திரி, நறுக்கிய இஞ்சி துண்டுகள் மற்றும் சிறிதளவு கருவேப்பிலையை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும். இப்போது நாம் எந்த கப்பில் குதிரைவாலி அரிசியை எடுத்துள்ளோமாே அதே கப்பில் கப் அரிசிக்கு மூன்று கப் தண்ணீர் என்ற அளவில் எடுத்துக்கொண்டு எடுத்து கொண்டு அதனை கடாயில் ஊற்ற வேண்டும். பின்னர் இதனை நன்கு கொதிக்க விட வேண்டும். இப்போது இந்த கலவையில் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த தண்ணீர் நன்றாக கொதித்த பிறகு குதிரைவாலி அரிசி மற்றும் பாசிப்பருப்பு இரண்டையும் கழுவி கொதிக்கும் தண்ணீரில் சேர்க்கவேண்டும். ஒரு கப் அரிசிக்கு மூன்று பங்கு தண்ணீர் ஊற்றினால் தான் பொங்கல் குளைவாக இருக்கும். அப்போது தான் சுவையும் அதிகமாக இருக்கும். குளைவாக உண்பதற்கு பிடிக்காரவர்கள் மூன்று கப் தண்ணீருக்கு பதிலாக இரண்டு கப் தண்ணீர் ஊற்றினால் போதுமானது. இப்போது இதை 15 அல்லது 20 நிமிடங்கள் வரை நன்றாக வேக வைக்கவும். இப்போது இந்த குதிரைவாலி அரிசி வெந்த பின் நன்கு கிளறி விட வேண்டும். அடிப்பிடிக்காத அளவுக்கு கிளரிக்கொண்டே இருக்க வேண்டும். இப்போது அடுப்பில் இருந்து இறக்கி சூடாக பரிமாறவும். இப்போது ருசியான குதிரைவாலி பொங்கல் தயார். இந்த குதிரைவாலி பொங்கல் சாப்பிடும்போது சட்னி அல்லது சாம்பார் வைத்து சாப்பிடவது இதன் சுவையை இன்னும் அதிகப்படுத்தும்.

Editor's Rating:
4.5
இதையும் படியுங்கள்: Ulunthankali Recipe: ஊட்டம் தரும் உளுந்தங்களி… ஈசியாக செய்வது எப்படி?
Jayasri C
Jayasri Chttps://infothalam.com/
நான் ஜெயஸ்ரீ, நான் Infothalam.com இணைய தளத்தில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறேன். தமிழ் மீதும் கட்டுரைகள் எழுவதில் உள்ள ஆர்வத்தால் நம்முடைய Infothalam இணையத்தளத்தில் சமையல் குறிப்பு, நாட்டு நடப்புச் செய்திகள், விளையாட்டு செய்திகள் போன்ற இன்னும் பல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
RELATED ARTICLES

Most Popular