இந்திய அளவில் மிகவும் பிரபலமான விளையாட்டுகளில் ஒன்று தான் இந்த ஐபிஎல் போட்டிகள். இந்த போட்டிகள் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம். இன்னும் சில நாட்களில் இந்த தொடரானது தொடங்கவுள்ளது. மக்கள் பலரும் இந்த போட்டிகளை எதிர்பார்த்து தான் இருக்கின்றனர்.
இந்த தொடரில் பல அணிகள் விளையாடினாலும் மக்கள் மத்தியில் சில அணிகள் தான் பிரபலமாக இருக்கிறது. அதில் முக்கிய இடத்தில் உள்ள அணி தான் RCB. இந்த அணி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். அதற்கு ஏற்றார்போல இந்த அணியும் தங்களுடைய சிறப்பான விளையாட்டை தான் தொடர்ந்து கொடுத்து வருகிறது.
இந்த அணியின் வீரர்களும் தனது சிறப்பான ஆட்டத்தை தான் வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் தான் தற்போது இந்த அணியின் முக்கியமான நட்சத்திர வீரர் ஒருவர் தனது ஓய்வை அறிவித்துள்ளார் என்று தகவல் வெளியாகி வருகிறது. இந்த தகவல் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தகவலின் படி இந்த அணியின் முக்கிய நட்சத்திர வீரரான தினேஷ் கார்த்திக் (Dinesh Karthik) இந்த நடப்பு ஐபிஎல் சீசனுடன் (IPL 2024) ஓய்வுப்பெறவுள்ளதாக அறிவித்துள்ளார். இவர் கடந்த 2008-ம் ஆண்டு முதல் நடந்த அனைத்து ஐபிஎல் அனைத்துப் போட்டிகளிலும் இவர் விளையாடினார் ஆனால் வெறும் இரண்டு போட்டிகளில் மட்டும் இவர் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் தமிழக அணிக்காகவும் விளையாடி வருகிறார். எனவே அந்த போட்டிகளில் அவர் அதிக கவணம் செலுத்த உள்ளதாவும் இதன் காரணமாக தான் தற்போது இந்த முடிவை எடுத்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படியுங்கள்: நீதா அம்பானியின் நெக்லஸ் விலை எத்தனை கோடி தெரியுமா? |