Homeஆன்மிகம்Sani Peyarchi Palangal 2024: கும்பத்தில் அஸ்தமனம் ஆகிறார் சனி… அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள்..!

Sani Peyarchi Palangal 2024: கும்பத்தில் அஸ்தமனம் ஆகிறார் சனி… அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள்..!

இந்த பதிவில் சனி பெயர்ச்சி பலன்கள் (Sani Peyarchi Palangal) பற்றி பார்க்க உள்ளாம். நவகிரகங்களில் ஒருவரான சனி பகவான் கடந்த ஆண்டு டிசம்பர் 20 ஆம் தேதி மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். இதன் காரணமாக பல ராசிகளுக்கு நன்மைகளும் தீமைகளும் நிகழும் என ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன.

30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்த ராசியான கும்பத்தில் பயணித்து வருகிறார் சனி பகவான். வருகிற 2025 ஆம் ஆண்டு வரை சனி பகவான் கும்ப ராசியில் தான் பயணம் செய்ய உள்ளார். இந்த நிலையில் மற்ற கிரகங்களின் மாற்றம் காரணமாக 12 ராசிகளிலும் மாற்றங்கள் ஏற்படும். இதனால் வரும் பிப்ரவரி 11 ஆம் தேதி கும்ப ராசியில் அஸ்தமனம் ஆகும் சனி மார்ச் 16 ஆம் தேதி மீண்டும் உதயம் ஆகிறார்.

நாம் செய்யும் கர்மங்களுக்கு பலன் தரும் சனி பகவான் இந்த அஸ்தமனம் காலத்திலும் உதயத்திற்கு பிறகும் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் ஏற்படுகிறது என்பதையும் எந்த ராசிகளுக்கு ஆபத்து என்பதையும் இந்த பதிவில் (Sani Peyarchi Palangal in Tamil) தெளிவாக பார்க்கலாம்.

சனி பெயர்ச்சி பலன்கள் (Sani Peyarchi Palangal)

ஒருவரின் வாழ்க்கையானது அவர்களின் ஜாதகத்தில் உள்ள நவகிரகங்களின் செயல்பாட்டை பொருத்து அமைகிறது என ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன. அதன் படி கடந்த ஆண்டு (2023) டிசம்பர் மாதம் 20 ஆம் தேதி மகர ராசியில் இருந்து தனது சொந்த ராசியன கும்ப ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சி அடைந்தார்.

நவகிரகங்களில் நாம் செய்யும் செயலுக்கு ஏற்றார் போல் வீதி வழங்குபவராக இருக்கும் சனி பகவான் மிகவும் மெதுவாக நகர கூடியவர். நாம் செய்யும் நன்மை மற்றும் தீமை செலுக்கான பலன் மீண்டும் நமக்கு திரும்ப கிடைக்கும் என்ற வாழ்கை அனுபவ பாடம் கற்று தருபவர் சனி பகவான். இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரை கும்ப ராசியில் தான் பயனம் செய்ய உள்ளா்.

இந்த நிலையில் சூரிய பகவான் சனிக்கு அருகியல் வரும் போது சனி பகவான் அஸ்தனம் (Sani Peyarchi Period) ஆகிறார். இதன் காரணமாக வரும் பிப்ரவரி 11 ஆம் தேதி அஸ்தமனம் ஆக உள்ளார் எனவே சில ராசிகளுக்கு நல்ல மற்றும் தீய பலன்கள் கிடைக்க உள்ளன. அதேபோல் வரும் மார்ச் மாதம் 16 ஆம் தேதி உதயம் ஆக உள்ளார் இதன் பலன்களைவும் (Sani Peyarchi Endral Enna) இந்த பதிவில் பார்க்கலாம்.

சனி அஸ்தமஸ்தால் ஏற்படும் பலன் (Sani Peyarchi Palangal in Tamil)

30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்த ராசிக்கு வந்துள்ள. இந்த கும்ப ராசியில் சனி பகவான் அஸ்தமன (Sani Asthamanam in Tamil) காலத்தினால் தனுசு ராசிக்கு ஏழரை சனியில் இருந்து விடுதலை கிடைக்கும். இதனால் தனுசு ராசிக்காரர்களுக்கு பல நன்மைகள் ஏற்படும் என கூறப்படுகிறது.

அதேபோல் மேஷம், ரிஷபம் மற்றும் மிதுனம் போன்ற மூன்று ராசிகளுக்கு பிரச்சனைகள் ஏற்படும். இந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும். குடும்பத்தில் உள்ளவர்களிடையே மனக்கசப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இவர்கள் பணம் கொடுக்கல் வாங்குதலில் அதிக கவனமாக இருக்க வேண்டும் என ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன.

Sani Peyarchi Palangal 2024

சனி உதய காலத்திற்கு பிறகு ஏற்படும் பலன் (Sani Peyarchi Palangal 2024)

சூரிய பகவான் மீன ராசிக்கு செல்வரால் மீண்டும் சனி பகவான் மார்ச் மாதம் 16 ஆம் தேதி உதயம் ஆகிறார். இந்த உதய காலத்திற்கு பிறகு சனி பகவானால் 12 ராசிகளில் சில ராசிகளுக்கு நன்மை தரும் பலன்கள் ஏற்பட உள்ளன. இதனை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

ரிஷப ராசி

சனி பகவான் உதய காலத்திற்கு பிறகு சில ராசிகளுக்கு நன்மைகளும் தீமைகளும் நடைபெற உள்ளன. இந்த வகையில் ரிஷப ராசிக்கு அதிர்ஷ்டம் ஏற்பட போகிறது. பல வருடங்களாக தடைப்பட்டு இருக்கும் காரியங்கள் அனைத்தும் நடைபெறும். நிதி சம்பந்தப்பட்ட காரியங்களில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சனி பகவான் நல்ல பலன்களை ரிஷப ராசிக்கு யோகம் கிடைக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் உண்டாகும். இலக்குகளை அடைவதற்கு அதிக சிரமங்கள் மேற்கொள்ள வேண்டும். அதேபோல் ரிஷப ராசிக்காரர்களுக்கு வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு ஏற்படும்.

மேலும் படிக்க: Guru Parka Kodi Nanmai: குரு பகவானால் ஏற்படும் நன்மைகள்..!

தூலாம் ராசி

சனி பகவான் உதயம் காரணமாக துலாம் ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்க உள்ளதாக ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன. இதுவரை உங்கள் வாழ்வில் ஏற்பட்ட கஷ்டங்கள் அனைத்தும் விலகும். வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். எதிர்பாராத நேரத்தில் உங்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். குடும்பத்தில் அமைதி ஏற்படும். நண்பர்களிடம் இருந்து உதவிகள் கிடைக்கும். வருமானத்தில் எந்த வித குறைவும் இருக்காது.

தனுசு ராசி

தனுசு ராசிக்கு சனி பகவான் உதயம் ஆனது யோகத்தை கொடுக்க போகிறது. இதுவரை வாழ்வில் ஏற்பட்டு வந்த பிரட்சனைகள் குறையும். வருமானத்தில் எந்த வித குறையும் இருக்காது. இதனால் நிதி சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் குறையும். வேலை செய்யும் இடங்களில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். தனுசு ராசிக்காரர்கள் வெளியூர் பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். அதேபோல் உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன.

சூரிய பகவான் சனிக்கு அருகில் வருவதால் தான் இந்த அஸ்தமன நிகழ்வு நடைபெறுகிறது. மார்ச்சி 16 ஆம் தேதி சூரியன் மீன ராசிக்கு சென்று விடுவதால் மீண்டும் சனி பகவான் உதயமாகிறார். இதனால் சில ராசிகளுக்கு நன்மைகள் நடைபெற உள்ளது அதனை பற்றி இந்த பதிவில் பார்த்தோம். இவையே இந்த சனி அஸ்தமனம் மற்றும் உதத்தால் ஏற்படும் பலன்கள் (Sani Peyarchi Palangal in Tamil) ஆகும்.

இருப்பினும் இந்த தகவல்கள் அனைத்தும் ஜோதிட சாஸ்திரங்கள் படி ஜாதகத்தில் உள்ள ராசி மற்றும் நட்சத்திரங்கள் பொருத்து மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவரின் ராசி மற்றும் நட்சத்திரத்திற்கு ஏற்றார் போல் தான் இந்த சனி பலன்கள் அமையும் என கூறப்படுகிறது.

மேலும் படிக்க: இந்த ராசிகளுக்கு இனி லக் தான்..! செல்வம் வீட்டை தேடி வருமாம்..!
Abinaya G
Abinaya G
வணக்கம்.. நான் அபிநயா. நமது infothalam.com இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக அனைத்து துறை தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் வண்ணம் எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.
RELATED ARTICLES

Most Popular