இந்த அண்டிற்கான ஐபிஎல் சீசன் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் அனைத்து அணிகளும் தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இந்நிலையில் தொடர்ந்து அணிகளுக்கு இடையேயான போட்டிகளும் நடைபெற்று வருகிறது. இந்த வரிசையில் அடுத்து மும்பை மற்றும் பெங்களூரூ அணிகளுக்கு இடையே போட்டிகள் நடைபெறவுள்ளது.
2024-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் மும்பை அணி இதுவரை நான்கு போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் 3 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. ஒரே ஒரு போட்டியில் மட்டும் தான் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் அடுத்த போட்டியில் இரண்டு அனுபவ வீரர்களை நீக்க திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அதேபாேல் தான் பெங்களூரு அணியும் இதுவரை 5 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது.
இந்நிலையில் தான் தற்போது இந்த இரண்டு அணிகளும் மோதவுள்ளது. பெங்களூரு அணியின் முக்கிய வீரர் விராட் கோலி தான். அவர் விக்கெட்டை எடுத்துவிட்டால் மும்பை அணி வெற்றிப்பெற அதிக வாய்ப்புகள் உள்ளது. எனவே அவரை வீழ்த்துவதே முக்கியம் என்ற நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி இந்த போட்டியில் ஸ்ரேயாஸ் கோபாலை களமிறக்க அதிக வாய்ப்புகள் உள்ளது.
இவர் இதுவரை நடைபெற்ற போட்டிகளில் அதிக முறை விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள மூத்த சுழற்பந்து வீச்சாளரான பியுஷ் சாவ்லா இந்த ஆண்டடில் நடைபெற்ற போட்டிகளில் சரியாக விளையாடவில்லை என்று தான் கூறவேண்டும்.
இறுதியாக நடைபெற்ற டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் கூட அவர் 4 ஓவர்கள் வீசி 32 ரன்கள் விட்டுக் கொடுத்து இருந்தார். ஆனால் ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை. எனவே இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians Team) அணியிலிருந்து அவர் நீக்கப்பட அதிக அளவிலான வாய்ப்புகள் உள்ளது.
மேலும் அவருக்கு பதிலாக ஆப்கானிஸ்தானை சேர்ந்த அனுபவ ஆல் ரவுண்டரான முகமது நபி நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக இலங்கை வேகப் பந்துவீச்சாளர் நுவான் துஷாரா அணியில் (MI Squad) சேர்க்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படியுங்கள்: தோனியின் பல வருட சாதனையை முறியடித்தார் விராட் கோலி..! |