Home Blog

வெறும் 5 நிமிட நடிப்பிற்கு 5 கோடி சம்பளம் வாங்கும் பிரபல நடிகை… யார் ஆவர்?

தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்கள் பலருடன் சேர்ந்து பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். இதன் காரணமாக இவர் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளமும் அதிகரித்துள்ளது. அதுபோல தான் தற்போது ஒரு சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது. இதன் படி சமந்தா 5 நிமிட நடிப்பிற்கு 5 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான படங்கள் எதுவும் அவருக்கு மிகப்பெரிய வெற்றி படங்களாக அமையவில்லை. மேலும் சமீபத்தில் இவர் லீட் ரோலில் நடித்து வெளியான யசோதா மற்றும் சாகுந்தலம் ஆகிய இரண்டு திரைப்படங்களும் தோல்வியை தழுவியது.

இதுபோன்ற தொடர் தோல்விக்கு பிறகு இறுதியாக சமந்தா மற்றும் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான குஷி திரைப்படத்தில் சமந்தா ஹீரோயினாக நடித்திருந்தார். இந்த படம் காதல் ஆக்ஷன் இரண்டும் கலந்த கதைக்களத்தில் உருவாகி இருந்தாலும் குஷி படத்திற்கு மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களே வந்தது.

இது போன்ற தொடர் தோல்விகள் காரணத்தால் அவதிப்பட்டு வரும் சமந்தா விரைவில் ஒரு சூப்பர் படம் மூலம் கம்பேக் கொடுப்பார் என்று ரசிகர்களால் எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தான் தற்போது சமந்தா பற்றிய ஒரு சுவாரஸ்யமான தகவல் (Actress Samantha Salary Per Movie) வெளியாகியுள்ளது.

Actress Samantha Salary Per Movie

இந்த தகவலின் படி புஷ்பா படத்தில் மாபெரும் வெற்றிப்பெற்ற பாடலான ஊ சொல்றியா மாமா பாடலில் சமந்தா நன்றாக நடித்து இருப்பார். இந்த பாடலுக்கு 5 நிமிடம் நடனம் ஆடிய சமந்தாவுக்கு ரூ.5 கோடி சம்பளம் (Actress Samantha Salary) வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது சமூக வளைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்கள்: ஈரமான ரோஜாவே கேபி சன் டிவியில் நடிக்கும் புதிய சீரியல்… ஹீரோ யார் தெரியுமா?

அதிகம் படித்த பெண்ணை திருமணம் செய்யாதீர்கள்..! வைரலாகும் போஸ்ட்..!

தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே 90ஸ் கிட்ஸ்களுக்கு திருமணம் (90s kids marriage expectations) நடப்பது இல்லை. அவர்களுக்கு பெண் கிடைக்கவில்லை போன்ற மீம்ஸ்கள் தான் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன.

ஒரு காலத்தில் பெண் படிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை, பெண் கிடைத்தால் போதுமானது என்று படிக்காத பெண்களை திருமணம் செய்தனர். முன்பெல்லாம் படித்த பெண்கள் வேண்டாம். படிக்காத பெண்கள் தான் வேண்டும் போன்ற நிபந்தனைகளை விதித்து திருமணம் செய்தனர். பிறகு கிராமத்து பெண்கள் தான் வேண்டும். ஓரளவிற்கு கூட்டி படிக்க தெரிந்தால் போதுமானது என்று திருமணம் செய்தனர்.

பிறகு படித்த பெண்கள் இருந்தால் போதும், ஆனால் வேலைக்கு செல்ல வேண்டாம் போன்ற நிபந்தனைகளை விதித்து திருமணம் செய்தனர். பிறகு வேலைக்கு செல்லலாம், ஆனால் நர்ஸ், டீச்சர் வேலைக்கு செல்லலாம் என்ற நிபந்தனை விதித்து திருமணம் செய்துக்கொண்டனர். ஆனால் இப்போது பொருளாதார ரீதியாக உறுதுணையாக இருக்க வேலைக்கு செல்லும் பெண்களை பலர் தேடி திருமணம் செய்து கொள்கிறார்கள்.

இவ்வாறாக பெண்கள் படிக்கலாமா, வேண்டாமா, வேலைக்கு செல்லலாமா, வேண்டாமா போன்ற பெண்களை முன்னிறுத்தி சமூகவலைதளங்களில் பதிவிடுவது அதன் மூலம் லைக்ஸ் வருவது எல்லாம் நமக்கு தெரிந்தது தான்.

இந்நிலையில் சூரத்தை சேர்ந்த ஒருவர் பதிவொன்றை தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில் அதிகம் படித்த வேலை செய்யும் பெண்களைத் திருமணம் செய்தால், அது உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் மோசமான முடிவுகளில் ஒன்று என்று கூறினார். ஒரு தனிப்பட்ட நபரின் வாழ்கையில் நடக்கும் கருத்துகளை ஒட்டு மொத்த சமூகத்தின் உரிமையும் இழிவுப்படுத்தும் வகையில் இவரின் பதிவுகள் உள்ளதாக நெடிசன்கள் கருத்துகள் தெரிவிக்கின்றன.

இதற்கு பலரும் நீங்கள் மனைவியை தேடவில்லை, அடிமையை தேடுகிறீர்கள் என்று பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க: என்ன சொல்ல போகிறாய்? காதலனின் காத்திருப்பின் வலி..!

தெலுங்கு சினிமாவை பழிவாங்க தான் வின்னர் திரைப்படம் எடுத்தேன்..!

தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில் தான் இயக்குநர் சுந்தர்.சி தற்போது கூறியுள்ள கருத்து அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அவர் கூறியதாவது, நான் தெலுங்கு சினிமாவை பழிவாங்கதான் வின்னர் திரைப்படத்தை (Winner Movie Tamil) எடுத்ததாக கூறினார்.

கடந்த 2003-ஆம் ஆண்டு நடிகர் பிரசாந்த் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் வின்னர். இந்த திரைப்படத்தில் கிரண், வடிவேலு, நம்பியார், ரியாஷ் கான், எம்.என் ராஜம் உள்ளிட்டவர்கள் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பு கிடைத்தது. மாபெரும் வெற்றி பெற்றது வின்னர் திரைப்படம்.

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய சுந்தர்.சி நான் வின்னர் திரைப்படம் எடுப்பதற்கு முன்பு தயாரிப்பாளர் என்னிடம் கேசட் கொடுத்து இதில் நிறைய தெலுங்கு படம் இருக்கிறது. இதனை பார்த்துவிட்டு ஏதாவது படம் பிடித்திருந்தால் சொல்லுங்க நாம் ரீமேக் செய்யலாம் என்று கூறினார்.

நான் அவர் கொடுத்த கேசட்களில் உள்ள படத்தை பார்த்தேன். அதனை பார்த்துவிட்டு எனக்கு கோபம் தான் வந்தது. ஏனென்றால் என்னுடைய படத்தை அப்படியே காப்பி அடித்து படம் எடுத்திருக்கிறார்கள். எனக்கு அந்த படத்தை எடுத்த இயக்குநர் மீது கோபம் வரவில்லை. எனக்கு தெலுங்கு சினிமா மீது மொத்தமாகவே கோபம் வந்தது. அதனால் தான் நான் அவர்களின் நான்கு படங்களை காப்பி அடித்து வின்னர் திரைப்படம் எடுத்தேன் என்று கூறினார்.

இந்நிலையில் நான் காப்பி அடித்த திரைப்படத்திலும் தோற்றுவிட்டேன். காரணம் நான் தெலுங்கு சினிமாவை காப்பி அடித்து வின்னர் திரைப்படம் எடுத்தேன். அந்த படத்தை பார்த்து மீண்டு அதே போன்ற ஒரு படத்தை காப்பி அடித்து எடுத்து வைத்திருக்கிறார்கள். எனவே நான் அதிலும் தோற்றுவிட்டேன் என்று இயக்குநர் (Winner Movie Director) சுந்தர்.சி கலகலப்பாக பேசினார்.

Winner Movie Tamil
மேலும் படிக்க: ஈரமான ரோஜாவே கேபி சன் டிவியில் நடிக்கும் புதிய சீரியல்… ஹீரோ யார் தெரியுமா?

Election Movie Release Dates: உறியடி விஜய் குமாரின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும் தேதி குறித்து அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

தமிழ் திரையுலகில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான படம் தான் உறியடி இந்த படத்தின் மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு பெற்றவர் தான் விஜய்குமார். இந்த படத்தை தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு உறியடி 2 என்ற படத்திலும் விஜய்குமார் (Uriyadi Vijayakumar Next Movie) கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த இரண்டு படங்களை தவிர வேறு எந்த படத்திலும் அவர் நடிக்கவில்லை.

ஒரு சிறு இடைவெளிக்கு பின் கடந்த 2023 ஆம் ஆண்டு இறுதியில் இவர் நடிப்பில் வெளிவந்த படம் தான் ஃபைட் கிளப். இந்த திரைப்படம் சிறந்த மேக்கிங்காகா பாராட்டப்பட்டது. இருப்பினும் இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த நிலையில் விஜய்குமார் நடிப்பில் அடுத்ததாக உருவாகி (Uriyadi Vijayakumar New Movie) வரும் புதிய திரைப்படம் தான் எலக்கசன்.

கடந்த 2022 ஆம் ஆண்டு பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன் தயாரித்து வெளிவந்த சேத்துமான் என்ற படத்தின் இயக்குனர் ஆன தமிழ் இந்த எலக்சன் படத்தை இயக்குகிறார். இந்த எலக்சன் (Uriyadi Vijayakumar Election Movie) திரைப்படம் இவரின் இரண்டாவது படம் ஆகும். இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார்.

Uriyadi Vijayakumar Next Movie

இந்த எலக்சன் திரைப்படத்தின் ரீல் குட் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படம் திரைக்கு வரும் தேதி குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. வரும் மே மாதம் 17 ஆம் தேதி இந்த எலக்சன் திரைப்படம் அனைத்து (Election Movie Release Dates) திரையரங்குகளிலும் வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்னர்.

மேலும் படிக்க: என்ன சொல்ல போகிறாய்? காதலனின் காத்திருப்பின் வலி..!

ஈரமான ரோஜாவே கேபி சன் டிவியில் நடிக்கும் புதிய சீரியல்… ஹீரோ யார் தெரியுமா?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த சீரியலில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை கேப்ரில்லா (Gabriella). இந்த நிலையில் தான் அவர் சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் புதிய சீரியலில் நடிக்கவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இவர் திரைத்துறையில் சிறுவயது முதலே உள்ளார். கேபி 3 திரைப்படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்திருந்தார். அதை தொடர்ந்து சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிப்பரப்பான 7சி என்னும் சீரியலிலும் நடித்து இருந்தார். அதன் பிறகு சில வருடங்களுக்கு பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பெரிய அளவில் பிரபலமானார். அதன் பிறகு தான் இவர் விஜய் டிவியில் ஒளிப்பரப்பான ஈரமான ரோஜாவே சீரியலில் நடித்தார். இந்த சீரியல் இவருக்கு தனி பெயரை வாங்கி கொடுத்தது என்று தான் கூறவேண்டும்.

இந்த நிலையில் தான் ஈரமான ரோஜாவே சீசன் 2 சீரியல் முடிவடைந்த பிறகு இப்போது சன் டிவியில் விரைவில் தொடங்க உள்ள சீரியலில் (Eeramana Rojave Gabi New Serial) நடிக்கவுள்ளார். பல வருடங்களாக விஜய் டிவியில் பயணித்த அவர் தொடர்ந்து பயணிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் தற்போது ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் அவர் சன் டிவியில் இணைந்துள்ளார்.

தொடங்க இருக்கும் இந்த புதிய சீரியலில் (Gabriella New Serial in Sun Tv) கேப்ரில்லா மற்றும் ராகுல் ரவி இருவரும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சீரியலுக்கு மருமகள் என்று பெயர் வைக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும் இந்த சீரியல் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகாத நிலையில் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Rahul Ravi
இதையும் படியுங்கள்: Ramayanam Serial: மீண்டும் சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ள சீரியல்… ப்ரோமோ ரிலீஸ்…

Thengai Laddu Recipe: உங்க வீட்டில் தேங்காய் இருக்கா? அப்போ சுவையான தேங்காய் லட்டு செய்து பாருங்கள்…

Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் சுவை இனிப்பு தான். இன்று நாம் செய்ய உள்ள உணவும் இனிப்பு சுவை கொண்ட ஒன்றுதான்.

நாம் எந்த உணவு சாப்பிட்டாலும் இருதியில் நாம் ருசிக்க விரும்புவது இனிப்புகள் தான். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவது இனிப்புகள் தான். இந்த பதிவில் தேங்காய் மூலப்பொருளாக கொண்டு செய்யப்படும் தேங்காய் லட்டு செய்வது எப்படி (Thengai Laddu Seivathu Eppadi) என்பதை பார்க்கலாம்.

தேங்காய் லட்டு (Coconut Ladoo) Thengai Laddu Recipe in Tamil

பொதுவாக நம் வீடுகளில் ஏதாவது சுப நிகழ்ச்சிகள் நடைபெற்றது பெரும்பாலும் ஆகும் இனிப்பு பழகாரம் லட்டு ஆகும். இந்த லட்டில் பல வகைகள் உள்ளன. ரவா லட்டு, பூந்தி லட்டு, வேர்க்கடலை லட்டு, தேங்காய் லட்டு மற்றும் கோதுமை லட்டு இது போன்ற பல வகைகள் உள்ளன.

லட்டு என்றால் அனைவருக்கும் நினைவுக்கு வருவது திருப்பதி தான். ஏனென்றால் ஆந்திர மாநிலத்தில் உள்ள திருமலை கோவிலில் பிரசாதமாக லட்டு தான் வழங்கப்படுகிறது. இந்த பதிவில் நாம் தேங்காய் லட்டு செய்வது எப்படி (How to Make Coconut Ladoo)என்பதை பார்க்க உள்ளோம். இந்த தேங்காய் லட்டு செய்ய தேவையான பொருட்கள் மற்றும் செய்முறை போன்றவை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள் (Thengai Laddu Ingredients)

  • தேங்காய் துருவல் – 1 1/2கப்
  • சர்க்கரை – 1/2 கப்
  • காய்ச்சிய பால் – 1கப்
  • டெசிகேடட் கோக்கனட் – தேவையானஅளவு
  • நெய் – தேவையானஅளவு
மேலும் படிக்க: Laddu Recipe: திருப்பதி லட்டுக்கு இணையான… சுவை மிகுந்த பூந்தி லட்டு செய்வது எப்படி…

தேங்காய் லட்டு செய்முறை (Thengai Laddu Seivathu Eppadi)

  • தேங்காய் லட்டு செய்ய (Coconut Ladoo Recipe in Tamil) முதலில் ஒரு தேங்காயை துருவி தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • அதன் பிறகு அடுப்பில் ஒரு பேனை வைத்து அதில் நெய் ஊற்ற வேண்டும். நெய் சூடான பிறகு அதில் துருவிய தேங்காய் சேர்த்து சிறிது நேரம் கிளறி விட வேண்டும்.
Coconut Ladoo Recipe in Tamil
  • பிறகு தேங்காய் உடன் பால் சேர்த்து கலந்து விட வேண்டும். பின் சிறிது வற்றும் வரை இடை இடையே கலந்து விட வேண்டும்.
  • பால் சிறிதளவு வற்றிய பிறகு அதில் சர்க்கரை சேர்த்து கலந்து விட வேண்டும் (ஈரப்பதம் இல்லாத அளவிற்கு வரும் வரை கிளறி விட வேண்டும்).
  • சுத்தமாக ட்ரை ஆன பிறகு லேசாக சூடு தணிந்த பின்னர் கையில் எடுத்து உருண்டையாக உருட்டி லட்டு போல் பிடித்து வைக்க வேண்டும்.
  • இறுதியாக லேசாக டெசிகேடட் கோக்கனட்டில் பிரட்டி எடுத்து கொள்ளவும். அவ்வளவு தான் இதே போல் அனைத்தும் உருட்டி வைத்தால் சுவையான தேங்காய் லட்டு தயார்.
Thengai Laddu Recipe: உங்க வீட்டில் தேங்காய் இருக்கா? அப்போ சுவையான தேங்காய் லட்டு செய்து பாருங்கள்…

வீட்டிலேயே தேங்காய் லட்டு செய்வது எப்படி என்பதை (Thengai Laddu Recipe in Tamil) இந்த பதிவில் பதிவிட்டுள்ளோம்.

Type: Dessert

Keywords: Thengai Laddu Recipe in Tamil, Coconut Ladoo

Recipe Yield: 5

Preparation Time: PT5M

Cooking Time: PT25M

Total Time: PT30M

Recipe Ingredients:

  • Grated Coconut – 1 1/2 cups
  • Sugar – 1/2 cup
  • Boiled milk – 1 cup
  • Desiccated coconut – as required
  • Ghee – required quantity

Editor's Rating:
4.5
மேலும் படிக்க: Instant Ragi Recipes: மாவு இல்லாத நேரத்துல இத செஞ்சு பாருங்க..! அடிக்கடி செய்வீங்க..!

Ramayanam Serial: மீண்டும் சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ள சீரியல்… ப்ரோமோ ரிலீஸ்…

பிரபல தொலைக்காட்சி நிறுவனமான சன் டிவியில் முன்பு ஒளிபரப்பான ராமாயணம் சீரியல் (Ramayanam Serial in Sun TV) மீண்டும் ஒளிபரப்பாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சமஸ்கிருத காவியங்களில் ஒன்று தான் இராமாயணம். இந்த காவியம் ஆனது பெருமாளின் அவதாரமாக கருதப்படும் இராமனின் வாழ்க்கை வரலாற்றை கூறுகிறது. இந்த இராமாயன காவியத்தின் கதையானது கி.மு. 500 முதல் கி.மு. 100 வரை நடைபெற்றது என கூறப்படுகிறது.

இந்த இராமாயண காவியத்தை வடமொழியில் வால்மீகி எழுதினார். அதனை தழுவி தமிழ் மொழியில் கம்பர் எழுதினார். இதன் காரணமாக தமிழில் உள்ள ராமாயணம் கம்பராமாயணம் என அழைக்கப்படுகிறது (Ramayanam in Tamil). இராமணின் கதை கூறும் இந்த இராமாயணத்தை பல தொழைக்காட்சி நிறுவனங்கள் சீரியளாக ஒளிபரப்பி உள்ளன. அந்த வகையில் சன் டிவியும் இராமாயண சீரியளை ஒளிபரப்பி உள்ளது.

அயோத்தியை ஆண்ட ரகு வம்சத்தை சேர்ந்த இளவரசரான ராமர், அவர் மனைவியான சீதை மற்றும் இலங்கை வேந்தனான இராவணன் மூவரை மையமாகக் கொண்டு நகரும் இந்த காவியம் மீண்டும் சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. இதற்கான ப்ரோமோ சமீபத்தில் வெளியாகி (Ramayanam Serial in Tamil) மக்கள் மத்தியில் கவனத்தை பெற்றுள்ளது.

மேலும் படிக்க: புதிய சாதனை படைத்த சிறகடிக்க ஆசை சீரியல்..! இதை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டீங்க..!

வெள்ளித்திரை இல்லனா.. சின்னத்திரை.. வடிவேலு அடுத்த அவதாரம்..!

இன்றைய தலைமுறையினரின் மீம்ஸ்களின் தலைவன் என்று அன்போடு அழைக்கப்படுபவர் தான் காமெடி நடிகர் வடிவேலு. இவர் ஒரு காலத்தில் மற்ற காமெடி நடிகர்களுக்கு டஃப் கொடுத்தவர் என்றே கூறலாம். இவரின் முகப்பாவனைகள், நடிக்கும் விதம் ஆகியவை தான் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து வைத்துள்ளார் நடிகர் வடிவேலு.

தமிழ் சினிமாவில் ரெட் கார்ட் பிரச்சனைக்கு பிறகு நடிகர் வடிவேலு மீண்டும் நடிக்க தொடங்கினார். அவர் நடித்த நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படம் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை என்று தான் கூறவேண்டும். அதன் பிறகு வந்த மாமன்னன் திரைப்படத்தில் இவரின் நடிப்பு அனைவராலும் பாரட்டப்பட்டது. மீண்டும் அவர் சந்திரமுகி 2 திரைப்படத்தில் தனது காமெடி பயணத்தை தொடங்கினார். ஆனால் அவரின் நடிப்பு முன்பு போல் இல்லை என்று அனைவராலும் கூறப்பட்டது.

தற்போது நடிகர் வடிவேலு ஒரு சில படங்களில் நடித்து வருகிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது. இருந்தபோது அவருக்கு சினிமா வாய்ப்புகள் முன்பு போல் இல்லாததால் இவரின் ரசிகர்கள் எப்படி இருந்த மனிதன் இப்போ எப்படி ஆகிவிட்டார் என்று கூறிவருகின்றனர்.

இந்நிலையில் இவர் தற்போது சின்னத்திரையில் தன் காலடியை பதித்துள்ளார் என்று தான் கூறவேண்டும். சன் டிவியில், ஒளிபரப்பாகும் டாப் குக்கு, டூப் குக்கு என்ற (Top Cooku Dupe Cooku) சமையல் ரியாலிட்டி நிகழ்ச்சி அனைவரின் எதிர்ப்பார்பை பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் (Actor Vadivelu re-entry) தான் நடிகர் வடிவேலுவை அழைத்திருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு சன் டிவி தரப்பு நடிகர் வடிவேலுக்கு அழைப்பு விடுத்ததும் அவர் உடனே சம்மதம் தெரிவித்துள்ளார் என்ற தகவலும் நமக்கு கிடைத்துள்ளது. இவர் இந்த நிகழ்ச்சிக்கு (Actor Vadivelu Re entry In cooking Show) சம்பளமாக ரூ.1 கோடி வரை பெற்றுள்ளார் என்பது அனைவரையும் வியக்க வைத்துள்ளது.

Top Cooku Dupe Cooku
மேலும் படிக்க: மனசினுள்ளே தாகம் வந்துச்சா வந்துச்சா.. நடிகை கோபிகாவை நியாபகம் இருக்கா?

மீண்டும் இ-பாஸ் கட்டாயம்: ஐகோர்ட் உத்தரவு… அதிர்ச்சியில் மக்கள்..!

கோடை காலம் என்லாளே அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளும் விடுமுறை அளிக்கப்பட்டுவிடும். இதுபோன்ற விடுமுறை நாட்களில் அனைவரும் குடும்பத்துடன் சுற்றுலா பயணத்திற்கு செல்வார்கள். இந்து போன்று போகும் சுற்றுலா பயணத்திற்கு செல்பவர்களுக்கு ஐகோர்ட் ஒரு புதிய உத்தரவை (Madras High Court Order) அறிவித்துள்ளது.

ஊட்டி , கொடைக்கானல் போன்ற சுற்றுலா தளங்களுக்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு வரும் மே 7 ஆம் தேதி முதல் இ-பாஸ் வழங்கும் நடைமுறை அமல்படுத்த (E-Pass for Kodaikanal and Ooty) வேண்டும் என நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்கு சென்னை உயர் நீதிமன்ற நம் உத்தரவிட்டுள்ளது.

கோடை விடுமுறையை முன்னிட்டு பெரும்பாலான குடும்பங்கள் சுற்றுலா பயணமாக கொடைக்கானல் மற்றும் ஊட்டி போன்ற இடங்களுக்கு செல்வார்கள். இதன் காரணமாக அதிகப்படியான சுற்றுலா பயணிகள் ஊட்டி, கொடைக்கானல் போன்ற பகுதிகளில் இருப்பார்கள் அவர்கள் வரும் வாகனங்களும் அதிகமாக இருக்கும் என்பதால், அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும். மேலும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும்.

இந்த நிலையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான வழக்கு நேற்று சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகியோர் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்கள் காணொலி வாயிலாக இந்த வழக்கில் ஆஜரானானர்கள். அரசு தரப்பில் வக்கீல் ஜெனரல் பி.எஸ். ராமன் ஆஜரானார். அப்போது அவர் ஊட்டி மற்றும் கொடைக்கானல் பகுதிகளில் எத்தனை வாகனங்கள் செல்லலாம் என்பது குறித்து சென்னை ஐ.ஐ.டி மற்றும் பெங்களூரு ஐ.ஐ.எம் கல்வி நிறுவனங்கள் ஆய்வு செய்ய இருக்கின்றன என தெரிவித்தார்.

அதன் பிறகு ஊட்டிக்கு தினமும் 1,300 வேன்கள் உட்பட 20 ஆயிரம் வாகனங்கள் வருகின்றன என கூறப்பட்டது. இதை கேட்ட நீதிபதிகள், இத்தனை வாகனங்கள் சென்றால் சுற்றுச்சூழல் என்ன ஆவது, மேலும் உள்ளூர் மக்கள் நடமாட இயலுமா என கேல்வி எழுப்பினர். அதன் பிறகு சென்னை ஐ.ஐ.டி மற்றும் பெங்களூரு ஐ.ஐ.எம் கல்வி நிறுவனங்களின் ஆய்வு முடிவுகள் வரும் வரை இடைக்கால நடிவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

E-Pass for Kodaikanal and Ooty

அதன்படி கொரோனா காலத்தில் கடைபிடிக்கப்பட்ட இ-பாஸ் முறையை ஊட்டி மற்றும் கொடைக்கானலில் (E-Pass on Kodaikanal and Ooty) வரும் மே 7 ஆம் தேதி முதல் ஜூன் 30 ஆம் தேதி வரை நடைமுறைப்படுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு இ-பாஸ் வாங்கி வரும் வாகனங்களில் எத்தனை பேர் வருகின்றனர், ஒரு நாள் சுற்றுலா அல்லது தொடர்ந்து தங்குவார்கள் என்பது போன்ற விவரங்களை பெற வேண்டும் எனவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: மதுபிரியர்களுக்கு அதிர்ச்சி… 3 நாட்கள் டாஸ்மாக் விடுமுறை..!

நீண்ட நாள் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த சின்னத்திரை நடிகை..!

சன் டிவியில் ஒளிபரப்பான பிரபல சீரியல் தான் ரோஜா. இந்த சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை பிரியங்கா நல்காரி. ரோஜா சீரியலுக்கு (Roja Serial Actress Priyanka Nalkari) பிறகு இவர் சீதா ராமன் என்ற சீரியலில் நடித்தார். அதன் பிறகு அவர் எந்த சீரியலிலும் நடிக்கவில்லை. தனது நீண்ட நாள் காதலரான தாெழிலதிபரை ஒருவரை திருமணம் செய்துக்கொண்டார். இவரின் காதலுக்கு வீட்டார் சம்மதம் தெரிவிக்காததால் வீட்டை விட்டு வெளியேறி தனது காதலை கரம் பிடித்தார்.

பிரியங்கா நல்காரின் கணவர் மலேஷியாவை சேர்ந்த தொழிலதிபர் என்பதால், மலேஷியாவிலேயே பிரியங்கா நல்கார் தங்கிவிட்டார். நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் நளதமயந்தி சீரியல் மூலம் நடிக்க வந்தார். இவர் அவ்வப்போது சென்னை டூ மலேஷியா என மாறி மாறி போய்க்கொண்டிருந்தார்.

பிரியங்கா நல்கார் தனது காதல் கணவருடன் உள்ள புகைப்படங்கள் எல்லாம் சமூகவலைதளப் பக்கத்தில் பதிவேற்றி கொண்டிருந்தார். இந்நிலையில் தான் திடீரென்று தனது சமூகவலைதளப் பக்கத்தில் இருந்து தனது கணவருடன் உள்ள புகைப்படங்கள் அனைத்தையும் நீக்கினார் பிரியங்கா. இதனால் இவரை பின்தொடந்தவர்கள் திருமணம் ஆகி 1 வருடம் ஆகவில்லை அதற்குள் இருவருக்கும் இடையில் எதுவும் பிரச்சனையா, இருவரும் விவாகரத்து செய்ய போகிறார்களா போன்ற கேள்விகளை எழுப்பி வந்தனர்.

இதனை எல்லாம் கண்டுக்கொள்ளாத பிரியங்கா நல்கார், மெளனம் காத்து வந்தார். இந்த சர்ச்சை பேச்சுக்கு முற்றி புள்ளி வைக்கும் விதமாக தனது பிறந்த நாளை கணவருடன் கொண்டாடிய புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.பிரியங்கா நல்கார்க்கு அவரது கணவர் (Roja Serial Actress Priyanka Nalkari Husband) சர்ப்ரைஸாக கேக் வெட்டி மனைவியின் பிறந்தநாளை கொண்டாடி உள்ளார். இதற்கு பிரியங்காவின் ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரித்துள்ளனர்.

Roja Serial Actress Priyanka
மேலும் படிக்க: 25 வருடத்திற்கு பிறகு அஜித்துடன் இணையும் சிம்ரன்… என்ன படம் தெரியுமா?