1952 ஆம் ஆண்டு முதல் தென்னிந்திய நடிகர் சங்கம் ஆனது சென்னையில் இயங்கி வருகிறது. தற்போது இந்த சங்கத்தின் தலைவராக நடிகர் நாசர் இருக்கிறார். நடிகர் சங்க கட்டிட கட்டுமான பணிக்கு நடிகர் நெப்போலியன் (Nepolean) நிதியுதவி வழங்கியுள்ளார். நெப்போலியன் செய்த நிதி உதவிக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்னிந்திய நடிகர் சங்கமானது கடந்த 1952 ஆம் ஆண்டு முதல் சென்னையில் இயகங்கி வருகிறது. இந்த சங்கத்தின் தலைவர்களாக பல நடிகர்கள் இருந்துள்ளனர். நடிகர் சிவாஜி கணேசன், விஜயகாந்த், சரத்குமார் போன்றவர்கள் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர்களாக இருந்துள்ளனர்.
தற்போது தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராக நடிகர் நாசர் செயல்பட்டு வருகிறார். நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளராக விஷாலும் மற்றும் பொருளாளராக நடிகர் கார்த்தியும் பொறுப்பில் இருந்து வருகின்றனர். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புது கட்டிடத்தின் கட்டுமான (New Nadigar Sangam Building) பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
புதிய கட்டிடம் கட்டும் பணிக்கு மொத்தமாக 40 கோடி நிதி தேவைப்படுவதாக தென்னிந்திய நடிகர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதற்காக நடிகர்கள் கமல்ஹாசன், விஜய், உதயநிதி ஸ்டாலின் போன்றவர்கள் ரூபாய் 1 கோடி நிதி உதவி வழங்கி உள்ளனர். சமீபத்தில் கூட நடிகர் சிவகார்த்திகேயன் ரூபாய் 50 லட்சம் நிதி உதவி வழங்கினால்.
இவர்களை போல் மேலும் பல நடிகர்கள் நிதி உதவி வழங்கி உள்ளனர். இந்தநிலையில் தற்போது நடிகர் நெப்போலியனும் ரூபாய் 1 கோடியை தென்னிந்திய நடிகர் சங்கம் கட்டுமான பணிக்கு (Napoleon gave Funds to Nadigar Sangam) வழங்கியுள்ளார்.
இந்த கோடை வெயிலால் உடல் அதிக அளவில் வெப்பமடையும். இதன் காரணமாக உடல் சூடு அதிகரிக்கும். இதுப்போன்ற நேரத்தில் நாம் நம் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இதற்கு பல உணவுகள் உள்ளது. அதில் மிகவும் முக்கியமான ஒரு உணவு தான் வெந்தய கஞ்சி. ஆனால் இதனை பலர் சாப்பிடுவதே இல்லை. ஏனென்றால் இதில் உள்ள கசப்பு தன்மை தான் இதற்கு காரணம். எனவே நாம் இப்பதிவில் கசப்பு இல்லாமல் வெந்தயக் கஞ்சி செய்வது எப்படி என பார்க்கலாம்.
இந்த வெந்தயக் கஞ்சி உடலுக்கு பல நன்மைகளை தருகிறது. அதிலும் முக்கியமாக இது உடல் சூட்டை குறைக்கிறது. அதோடு மட்டுமல்லாமல் உடல் சூட்டால் ஏற்படும் வயிற்று வலி ,முடி கொட்டுதல் போன்றவற்றையும் இது தடுக்கும் என கூறப்படுகிறது. இந்த கஞ்சியை கோடை கோடை காலங்களிலும், பெண்கள் மாதவிடாய் நேரங்களிலும் செய்து குடித்து வரலாம். இந்த கஞ்சியை நாம் காலை நேரத்தில் குடிப்பது மிகவும் சிறந்தாக இருக்கும்.
வெந்தய கஞ்சி செய்வது எப்படி (How To Make Vendhaya Kanji in Tamil)
தேவையான பொருட்கள் (Vendhaya Kanji Ingredients)
வெந்தயம் – 6 ஸ்பூன்
அரிசி – 3 ஸ்பூன்
வெல்லம் – சுவைக்கேற்ப
பால் – 400 ML
வெந்தய கஞ்சி செய்முறை (Vendhaya Kanji Recipe in Tamil)
வெந்தய கஞ்சி செய்வதற்கு முதலில் வெந்தயம் மற்றும் அரிசி இரண்டையும் கழுவி தனித்தனியே முதல் நாள் இரவே ஊறவைத்து விட வேண்டும். இவ்வாறு செய்வதால் வெந்தயத்தில் உள்ள கசப்பு தன்மை நீங்கிவிடும்.
மறுநாள் காலையில் ஊற வைத்த அரிசியில் இருந்து தண்ணீரை சிறிது நிறுத்து விட்டு அதை மிக்ஸியில் சேர்த்து ரவை பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அரிசியுடன் வெந்தயத்தையும் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
இப்போது அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் ஒரு ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து சூடாக்கவும். இந்த தண்ணீர் நன்கு சூடான பிறகு அரைத்து வைத்துள்ள அரிசி மற்றும் வெந்தயத்தை சேர்க்கவும்.
இப்போது அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து அதனை பத்து நிமிடம் வரை நன்கு கிளறி வேக வைக்கவும்.
இவை நன்றாக வெந்த பிறகு அதில் சுவைக்கு ஏற்ப வெல்லம் சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
இப்போது அடுப்பை அணைத்துவிட்டு அதில் காய்ச்சிய பாலை சேர்த்து நன்றாக கலந்து இறக்கினால் வெந்தயக் கஞ்சி ரெடி.
நாம் இப்பதிவில் இந்த கோடை காலத்தில் உடல் சூட்டை தணிக்கும் வெந்தய கஞ்சி சுவையாக செய்வது எப்படி (Vendhaya Kanji Seivathu Eppadi) என்பது குறித்து பார்த்துள்ளோம்.
கோடையில் உடல் சூட்டை தணிக்கும் வெந்தய கஞ்சி... கசப்பே இல்லாமல் ருசியாக செய்யலாம் வாங்க..!
நாம் இப்பதிவில் உடல் சூட்டை தணிக்கும் வெந்தயக் கஞ்சி செய்வது எப்படி என பார்க்கலாம்.
Type:
Appetizer
Cuisine:
Tamil Nadu
Keywords:
Vendhaya Kanji Recipe, Vendhaya Kanji
Recipe Yield:
2
Preparation Time:
PT10M
Cooking Time:
PT20M
Total Time:
PT30M
Recipe Ingredients:
Fenugreek – 6 spoons
Rice – 3 spoons
Jaggery – as per taste
Milk – 400 ml
Recipe Instructions:
வெந்தய கஞ்சி செய்வதற்கு முதலில் வெந்தயம் மற்றும் அரிசி இரண்டையும் கழுவி தனித்தனியே முதல் நாள் இரவே ஊறவைத்து விட வேண்டும். இவ்வாறு செய்வதால் வெந்தயத்தில் உள்ள கசப்பு தன்மை நீங்கிவிடும்.
மறுநாள் காலையில் ஊற வைத்த அரிசியில் இருந்து தண்ணீரை சிறிது நிறுத்து விட்டு அதை மிக்ஸியில் சேர்த்து ரவை பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அரிசியுடன் வெந்தயத்தையும் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
இப்போது அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் ஒரு ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து சூடாக்கவும். இந்த தண்ணீர் நன்கு சூடான பிறகு அரைத்து வைத்துள்ள அரிசி மற்றும் வெந்தயத்தை சேர்க்கவும்.
இப்போது அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து அதனை பத்து நிமிடம் வரை நன்கு கிளறி வேக வைக்கவும்.
இவை நன்றாக வெந்த பிறகு அதில் சுவைக்கு ஏற்ப வெல்லம் சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
இப்போது அடுப்பை அணைத்துவிட்டு அதில் காய்ச்சிய பாலை சேர்த்து நன்றாக கலந்து இறக்கினால் வெந்தயக் கஞ்சி ரெடி.
ICAR-IARI Recruitment 2024: அரசு வேலைக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பாக வந்துள்ளது ஒரு மத்திய அரசு வேலை. ICAR-இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் (ICAR-IARI) 2024 ஆம் ஆண்டுக்கான ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டுள்ளது.
ICAR-IARI Velai Vaippu 2024 அறிவிப்பின் படி ICAR-IARI நிறுவனத்தில் காலியாக உள்ள பதவிக்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வித் தகுதி விவரங்கள், தேவையான வயது வரம்பு, தேர்வு முறை, கட்டண விவரங்கள் மற்றும் எப்படி விண்ணப்பிப்பது போன்ற பிற விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன அதனை பார்த்து தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
ICAR-IARI Jobs Vacancy Notification 2024 அறிவிப்பின் படி இந்த நிறுவனத்தில் ரிசர்ச் அசோசியேட் (RA) – 01 பணியிடம், சீனியர் ரிசர்ச் ஃபெலோ (SRF) – 04 பணியிடங்கள், இளம் நிபுணத்துவம் II (YPII) – 03 பணியிடங்கள் என மொத்தமாக 08 பணியிடங்கள் உள்ளன. இந்த வேலைவாய்ப்பு தொடர்பான அறிவிப்பு ICAR-IARI -ன் அதிகாரப்பூர்வ www.icar.org.in இணையதள பக்கத்தில் (ICAR-IARI Official Website) பதிவிடப்பட்டுள்ளது.
ICAR-IARI Recruitment படி காலியாக உள்ள பதவி விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் அல்லது பிஎச்டி முடித்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ICAR-IARI Jobs Notification 2024 -ன் படி காலியாக உள்ள வேலைகளுக்கு விண்ணப்பிப்பதற்கான குறைந்தபட்ச வயது வரம்பு 21 மற்றும் அதிகபட்ச வயது வரம்பு 45 ஆகும். மேலுள்ள கல்வி தகுதி மற்றும் வயது வரம்பிற்குட்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு ஆன்லைன் மூலமாக நேர்காணல் நடைபெறும். அதன் பிறகு காலியாக உள்ள பதவிக்கு தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்.
ICAR-இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி Research Associate (RA) பதவிக்கு மாதச் சம்பளமாக 49,000 – 54,000/- ரூபாயும், Senior Research Fellow (SRF) பதவிக்கு மாதச் சம்பளமாக 31,000 – 35,000/- ரூபாயும் மற்றும் Young Professional II (YPII) பதவிக்கு மாதச் சம்பளம் 42,000/- ரூபாயும் தரப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் ஏப்ரல் 25 தேதி முதல் மே 12 ஆம் தேதிக்குள் (25.04.2024 – 12.05.2024) ஆன்லைன் மூலம் மற்றும் ppefc.ged@gmail.com என்ற இ-மெயில் மூலமும் விண்ணப்பிக்க வேண்டும். இந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தை (Online Apply Link) பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்.
ICAR-IARI நிறுவனத்தில் உள்ள காலி பணியிடம் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள ICAR-இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் (ICAR-IARI) -ன் 2024 ஆம் ஆண்டிற்கான ஆட்சேர்ப்பு அதிகாரபூர்வ அறிவிப்பை (ICAR-Indian Agricultural Research Institute (ICAR-IARI) Official Notification) முழுவதுமாக படித்து தெரிந்து கொள்ளவும்.
மாதம் 54,000/- சம்பளத்தில் ICAR-IARI நிறுவனத்தில் மத்திய அரசு வேலை… மிஸ் பண்ணிடாதீங்க…
ICAR-IARI நிறுவனம் 2024 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை (ICAR-IARI Recruitment 2024) வெளியிட்டுள்ளது.
Salary Currency:
INR
Payroll:
MONTH
Date Posted:
2024-04-29
Posting Expiry Date:
2024-05-12
Employment Type :
FULL_TIME
Hiring Organization :
ICAR-Indian Agricultural Research Institute (ICAR-IARI)
மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் இருந்து காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுப்போன்ற பல்கலைக்கழகங்களில் வேலைப்புரிய வேண்டும் என்பது பலரது விருப்பமாக இருக்கும். அதுபோல எண்ணம் உள்ளவர்களுக்காக தான் தற்போது Madras University Recruitment 2024 குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் நிரப்பப்படவுள்ள காலிப்பணியிடங்கள் குறித்த விவரம் மற்றும் அவற்றிற்கு விண்ணப்பிக்க தேவையான கல்வித்தகுதி மற்றும் வயது வரம்பு உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் இப்பதிவில் பார்க்கலாம்.
மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Project Fellow என்னும் பதவியை நிரப்புவதற்கான Madras University Recruitment 2024 Official Notification அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இந்த மெட்ராஸ் பல்கலைக்கழக ஆட்சேர்ப்பு 2024 நடவடிக்கையின் படி காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.
இந்த Madras University Jobs Notification அறிவிப்பின் மூலம் நிரப்பப்பட உள்ள பதவிகளுக்கான கல்வித்தகுதி அதிகாரப்பூர்வ அறிவிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட குழுவில் இருந்து கட்டமைப்பு உயிரியல் அல்லது உயிர் தகவலியல் துறையில் Ph.D பட்டம் முடித்திருக்க வேண்டும். இந்த பணிகளுக்கு எந்த வித முன்அனுபவமும் தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Madras University Recruitment 2024-ன் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ஆஃப்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். அதாவது இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க அதிகாரப்பூர்வ இணையதளமான www.unom.ac.in-ல் வெளியாகியுள்ள விண்ணப்ப படிவத்தை டவுன்லோட் செய்து அதன் பிறகு அதனை முழுவதும் பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும். அல்லது பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை pkarthe@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
இந்த Chennai University பணிகளுக்கு நேர்காணல் நடத்தப்பட்டு அதன் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க எந்த வித விண்ணப்ப கட்டணமும் செலுத்த தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Chennai University Recruitment காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 26.04.2024 முதல் 06.05.2024 வரை (Chennai University Recruitment Vacancy Last Date) விண்ணப்பிக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. Chennai University நிறுவனத்தில் இருந்து வெளியாகியுள்ள இந்த பணிகளுக்கு தற்போது மொத்தமாக ஒரே ஒரு காலிப்பணியிடம் (Chennai University Job Vacancy) மட்டுமே உள்ளது.
இந்த Chennai University Jobs பதவிகளுக்கு விண்ணப்பிக்க வயது வரம்பு குறித்த விவரங்கள் அதிகாரப்புர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு வழங்கப்படும் சம்பளம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன் படி இந்த அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள Project Fellow பணிகளுக்கான சம்பளம் ரூபாய் 55,000 என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த Madras University Velaivaippu 2024 குறித்த முழு தகவல்களுக்கு ஆதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக பார்க்கவும்.
மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் மாதம் ரூ. 55,000/- சம்பளத்துடன் பணிபுரிய அரிய வாய்ப்பு..! மிஸ் பண்ணிடாதிங்க..!
மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் இருந்து காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றாகும். இந்த நிகழ்ச்சிக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் கடந்த 4 சீசன்களாக நல்ல வரவேற்பை மக்களிடம் பெற்றுள்ளது.
இந்நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 5-வது சீசன் cook with comali season 5 நேற்று தொடங்கிய நிலையில், இந்நிகழ்ச்சியில் செஃப் வெங்கடேஷ் பட் அதில் கலந்துக்கொள்ளவில்லை. இவர் சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள அவரின் நிகழ்ச்சியை பற்றிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக்வித் கோமாளி நிகழ்ச்சி தனித்துவமான சமையல் நிகழச்சியாகும். இந்த நிகழ்ச்சியல் செஃப்கள் ஆக வெங்கடேஷ் பட், தாமு மற்றும் தொகுப்பாளர் ரக்ஷன் ஆகியோர் கடந்த 4 சீசன்களாக பயணித்து வருகின்றனர். இதில கோமாளிகளாக புகழ், சுனிதா, ஷிவாங்கி, மணிமேகலை என இந்த நிகழ்ச்சி கலகலப்பாக சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் குக் வித் கோமாளி ஆரம்பித்து சீசன் 5 நேற்று தொடங்கிய நிலையில் இதில் செஃப் வெங்கட் பட் (cook with comali venkatesh bhat) கலந்துக்கொள்ள வில்லை. இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக விலகியதாக தகவல் வெளிவந்துள்ளது.
வெங்கடேஷ் பட், இந்த நிகழ்ச்சியின் முன்னாள் தயாரிப்பு நிறுவனமான மீடியா மேசன் உடனான கருத்து வேறுபாடு காரணமாக விலகிவிட்டதாக தகவல் அறியப்படுகிறது. செஃப் தாமுவும் விலகுவதாக அறிவித்திருந்த நிலையில் மீண்டும் அவர் இந்த நிகழ்ச்சியில் தொடர்வதாக அறிவித்திருந்தார். தற்போது இந்த சீசனில் செஃப் தாமுவுடன், சமையல்கலை நிபுணர் மாதம்பட்டி ரங்கராஸ் புதிய நடுவராக இணைந்துள்ளார்.
இந்நிலையில் வெங்கடேஷ் பட் ரசிகர்கள் உங்களை மிஸ் செய்வதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்திருந்தனர். அவரின் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெங்கடேஷ் பட் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில் நீங்கள் என்னை மிஸ் செய்வதாக கூறியது, நீங்கள் காட்டும் அன்பு இதற்கெல்லாம் நான் கொடுத்து வைத்துள்ளேன். கடவுளுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும் என்று தெரிவித்தார். நான் என்னைக்கும் உங்களை ஏமாற்ற மாட்டேன் என்று கூறி, உங்களுக்காக இன்று முதல் காலை 8 மணிக்கு ஒரு சர்ப்ரைஸ் காத்திருக்கு என்று கூறி அவர் பேசும் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.
MHC Recruitment 2024: சென்னை உயர் நீதிமன்றம் (MHC) 2329 அலுவலக உதவியாளர் மற்றும் வாட்ச்மேன் பணிகளுக்கான சமீபத்திய வேலை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி கல்வித் தகுதி விவரங்கள், தேவையான வயது வரம்பு, தேர்வு முறை, கட்டண விவரங்கள் மற்றும் எப்படி விண்ணப்பிப்பது போன்ற விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இதனை பயன்படுத்தி விருப்பமும், ஆர்வமும் உடையவர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
சென்னை உயர்நீதிமன்ற வேலைக்கு விண்ணப்பிக்க கல்வித் தகுதியாக பணியிடங்களுக்கு ஏற்றவாறு கல்வித் தகுதிகள், வயது வரம்பு மற்றும் பணிகளுக்கு ஏற்றவாறு ஊதியம் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. எனவே சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள்.
இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். மேலும் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க இந்த mhc.tn.gov.in லிங்கை கிளிக் செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம். இந்த பதவிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி விவரங்கள் 28.04.2024 முதல் 27.05.2024 வரை கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க கட்டணமாக அனைத்து விண்ணப்பதாரர்களும் (Madras High Court Recruitment 2024) ரூ.500/- மற்றும் ஆதிதிராவிடர், ஆதிதிராவிட வகுப்பினர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள், அனைத்து வகுப்பினைச் சார்ந்த ஆதரவற்ற விதவைகளுக்கு எவ்வித கட்டணமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த பணிகள் குறித்த தகவல்களை பெற சென்னை உயர் நீதிமன்றம் (MHC)-யின் www.mhc.tn.gov.in அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.
MHC Recruitment 2024: அனைவரும் எதிர்பார்த்த சென்னை உயர்நீதிமன்ற வேலைவாய்ப்பு..! 2329 காலிப்பணியிடங்கள்..!
சென்னை உயர் நீதிமன்றம் (MHC) 2329 அலுவலக உதவியாளர் மற்றும் வாட்ச்மேன் பணிகளுக்கான சமீபத்திய வேலை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இன்றைய காலகட்டத்தை பொறுத்த வரையில் சிலிண்டர்கள் பயன்படுத்தும் வீடுகளே இல்லை என்று தான் கூற வேண்டும். அந்த அளவுக்கு அனைவராலும் பயன்படுத்தப்படுத்தப்பட்டு வருகிறது. எந்த அளவிற்கு என்றால் இது அடிப்படை தேவைகளில் ஒன்றாகவே மாறிவிட்டது என்று தான் கூற வேண்டும். ஆனால் இந்த சிலிண்டர்களில் விலை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே தான் உள்ளது.
நாடு முழுவதும் மத்திய மற்றும் மாநில அரசு சிலிண்டர் விலையை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக ஏழை எளிய மக்கள் அனைவரும் பயனடையும் வகையில் மானிய விலையில் சிலிண்டர் போன்ற பல திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் இப்போது ஒரு புதிய விலை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இந்த மே 1-ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது என்றும் தகவல் (Cylinder Price Down) வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19-ம் தேதி முதல் தொடங்கி ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தான் தற்போது பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதத்தின் முதல் தேதியில் விலையை நிர்ணயம் செய்கின்றன. அதன்படி கடந்த மாதம் முதல் வீட்டு மற்றும் வணிக உபயோக சிலிண்டர் விலையில் தொடர்ந்து மாற்றம் ஏற்பட்டு கொண்டே வந்தது.
இந்த நிலையில் தான் வரும் மே மாதம் 1-ம் தேதி சிலிண்டர்களின் விலை அதிரடியாக குறைய வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி ஜிஎஸ்டி வரியும் குறைய அதிக அளவிலான வாய்ப்புகள் (Cylinder Price) உள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது. நடைபெற்று வரும் மக்களவை தேர்தலின் காரணமாக இது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன வான என்ற அனைவராலும் கூறப்படுகிறது.
தமிழ் சினிமா துறையில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை சமந்தா (Samantha). இவர் நேற்று அவரின் 37 வது பிறந்தநாளை கொண்டாடினார். சமந்தா பிறந்தநாளை முன்னிட்டு அவர் அடுத்து நடிக்கும் படத்தின் அப்டேட் (Bangaram Movie Update) வெளியாகி உள்ளது.
கடந்த 1987 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி சென்னையில் உள்ள பல்லாவரத்தில் பிறந்தார் நடிகை சமந்தா. சிறு வயது முதல் நடிப்பில் ஆர்வம் கொண்ட சமந்தா மாடலிங் துறையில் பயணிக்க தொடங்கினார். கடந்த 2010 ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சமந்தா.
அதன் பிறகு பானா காத்தாடி, மாஸ்கோவின் காவேரி, நடுநிசை நாய்கள் , நீதானே என் பொன்வசந்தம் போன்ற பல நல்ல படங்களில் நடித்து மக்கள் மத்தியிலும் திரைதுறையினர் மத்தியிலும் (Samantha New Movie Update) கவனம் பெற்றார். அதன் பிறகு சமந்தா நான் ஈ, அஞ்சான், கத்தி, 24, தெறி, மெர்சல் போன்ற பிரபலமான முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தற்போத முன்னணி நடிகையாக வழம் வருகிறார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழி திரைப்படங்களில் நடித்த சமந்தா பாலிவுட் திரைப்படத்தில் நடித்துள்ளார். இவர் தமிழ் மொழியில் இறுதியாக கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான காத்து வாக்குல இரண்டு காதல் படத்தில் நடித்தார். இந்த படத்தில் சமந்தாவுடன் இணைந்து நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதி நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கினார். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
அதன் பிறகு அவர் தெலுங்கு படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். சமீப காலங்களாக சமந்தா அவரின் உடல்நிலையை கருத்தில் கொண்டு பெரிய அளவில் அவர் திரைப்படங்களில் நடிப்பதில்லை. இந்த நிலையில் இவரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் அடுத்த படத்தின் அப்டேட் (Samantha Bangaram Movie Update in Tamil) ஒன்று வெளியாகி உள்ளது.
சமந்தா நடிக்கும் மா இண்டி பங்காரம் (Maa Inti Bangaram) என்ற திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்பொழுது வெளியாகி உள்ளது. இல்லத்தரசி தொற்றத்தில் கையில் துப்பாக்கியுடன் இருக்கும் சமந்தாவின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மக்கள் மத்தியில் கவனத்தை பெற்றுள்ளது. மேலும் இந்த படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
Tralala Moving Pictures என்ற நிறுவனம் தான் இந்த மா இண்டி பங்காரம் படத்தினை தயாரிக்கிறது. இந்த நிறுவனம் வேறொருவரின் தயாரிப்பு நிறுவனம் அல்ல. இந்த நிறுவனம் சமந்தாவின் தொடங்கிய உள்ள ஒரு தயாரிப்பு நிறுவனம் ஆகும். ஆகவே இந்த திரைப்படத்தின் மூலம் நடிகை சமந்தா தயாரிப்பாளராகவும் சினிமாதுறையில் களமிறங்கியுள்ளார்.
உணவே மருந்து என்ற முறையை பின்பற்றி தான் நம் முன்னோர்கள் வாழ்ந்து வந்தனர். சுவை உள்ள உணவாக இருந்தாலும் அதில் மருத்துவ குனமும் உடல் ஆரோக்கியத்தை பாதிக்காத வகையில் தான் நம் முன்னோர்கள் உணவுகளை உண்டு வந்தனர். அந்த வகையில் நாம் இன்று சமைக்க உள்ள உணவு தேங்காய் பால் ரசம் (Thengai Paal Rasam Recipe).
தென்னிந்திய உணவு வகைகளில் பல சத்துக்கள் உள்ளது. இன்றளவும் நம் வீடுகளில் காய்ச்சல், சளி போன்றவற்றிற்கு ரசம் வைத்து உண்பார்கள். ரசத்தில் மிளகு, சீரகம், பூண்டு, மஞ்சள் போன்றவை இருப்பதால் உண்பவர்களின் செரிமான திறனை அதிகரிக்கும். எனவே இது ஒரு சத்துள்ள உணவு வகை ஆகும்.
ரசம் சாப்பிடுவதால் ஜீரண ஆற்றல் அதிகரிக்கும் மற்றும் குடல ஆரோக்கியத்துக்கும் மிக நல்லது. அதிலும் இந்த ரசத்தில் தேங்காய்பால் சேர்த்து செய்தால் ஜீரண ஆற்றலை அதிகரிப்பதோடு வாய்ப்புண், வயிற்றுப் புண்ணையும் சரிசெய்யும். இந்த சத்துள்ள தேங்காய்பால் ரசம் செய்வது எப்படி (How To Make Thengai Paal Rasam) என்பதை இந்த பதிவில் பதிவிட்டுள்ளோம்.
தேங்காய் பால் ரசம் (Thengai Paal Rasam in Tamil)
உணவு உண்பதற்கு முன்னரோ, உணவுடனோ அல்லது உணவு பின்னரோ ரசம் உட்கொள்ளப்படும். இந்த ரசம் செரிமான செரிமான திறனை அதிகரிப்பதால் நாம் தினமும் உணவு உண்ட பிறகு ரசம் உண்பது நல்லது என கூறப்படுகிறது. சிலர் சாதத்தில் ரசம் போட்டு சாப்பிடுவார்கள், ஒரு சிலர் ரசத்தை மட்டும் குடிப்பார்கள். இந்த ரசத்தில் மிளகு, சீரகம், பூண்டு போன்றவை இருப்பதால் இது ஒரு சத்துள்ள உணவு ஆகும். இந்த ரசத்தில் தேங்காய் பால் கலந்தால் இது தேங்காய் பால் ரசமாகும். இந்த ரசம் செய்ய தேவையான பொருட்கள் மற்றும் செய்முறை போன்றவற்றை கீழே காண்போம்.
இந்த தேங்காய் பால் ரசம் (Coconut Milk Juice Recipe) செய்ய முதலில் ஒரு தேங்காயை துருவி அறைத்து இரண்டு முறை பால் எடுத்துக் கொள்ள வேண்டும். (முதல் பால் மற்றும் இரண்டாம் பாலை தனித்தனியாக எடுத்துக்கொள்ளவும்)
அதன் பிறகு ரசத்திற்கு தேவையான பச்சை மிளகாய், சீரகம் மற்றும் பூண்டு ஆகியவற்றை சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
தனியாக எடுத்து வைத்துள்ள 2வது பாலில் தக்காளியைப் போட்டு ஒரு கொதி வந்தத பிறகு அதில் அரைத்த மிளகாயை சேர்க்க வேண்டும்.
கொத்துமல்லி, கறிவேப்பிலை இலைகளை போடவும். இறுதியாக கெட்டியான முதல் பாலை ஊற்றி ஒரு கொதி வந்ததும் இறக்கி தேங்காய் எண்ணெயை ஊற்றவும். இப்போது சுவையான தேங்காய் பால் ரசம் தயார்.
Thengai Paal Rasam Recipe: குழந்தைகளையும் சாப்பிட வைக்கும் தேங்காய் பால் ரசம் செய்வது எப்படி…
சத்துள்ள தேங்காய் பால் ரசம் செய்வது எப்படி (Thengai Paal Rasam Recipe) என்பதை இந்த பதிவில் பதிவிட்டுள்ளோம்.
தமிழகத்தை பொருத்தவரையில் முக்கிய நாட்கள், திருவிழாக்கள் போன்ற நிகழ்ச்சிகளின் போது ஏற்படும் பிரச்சனைகளை தடுப்பதற்காக பல்வேறு முன்னெச்சரிக்கை நடிவடிக்கைகள் எடுக்கப்படும். அதில் முக்கிய நடிவடிக்கைகளுள் ஒன்று தான் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிப்பது. அதே போல தான் தற்போது ஒரு கோவில் திருவிழாவிற்காக மூன்று நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பபட்டுள்ளது.
இதுப்போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஒன்றுதான் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் 28,29,30 ஆகிய மூன்று தேதிகளில் புது மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெறவுள்ளது. இதனை அந்த மாவட்டம் முழுவதும் உள்ள மக்கள் கொண்டாடி சிறப்பிக்க உள்ளனர்.
இதன் காரணமாக இந்த திருவிழா நிகழ்ச்சியில் எந்தவிதமான அசம்பாவிதங்களும் நடைபெற்றுவிட கூடாது என்பதை கருத்தில் கொண்டு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி வரும் ஏப்ரல் 28 முதல் ஏப்ரல் 30 தேதி வரை, மதுரை மாவட்டத்தில் உள்ள அத்திப்பட்டி பகுதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவித்துள்ளார்.
மேலும் இந்த விடுமுறை நாட்களில் மதுரை மாவட்டத்திற்குட்பட்ட மதுபான கடையோ, பார்களோ செயல்படுவது தெரிய வரும் வேளையில் அந்த டாஸ்மாக் கடைகள் மற்றும் அவற்றின் உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் மதுப்பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.